நேரம் நெருங்குது-ஜோதி பிரகாசமா எரியுது- பிரியாணி ஆகாம தப்பிச்ச குஷி.. எஸ்.வி.சேகர் கடும் தாக்கு!
சென்னை: தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு தனி கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்வி சேகர், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் தமது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.
நடிகர் எஸ்வி சேகர் தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது: E D , INCOME TAX இவங்களுக்கு தகவல் குடுகிறவங்க பேரையே வெளியில சொல்லமாட்டாங்க. இந்த அடிப்படை அறிவு இல்லாதவங்க அடுத்தவனுக்கு பாடம் எடுக்க ஆசைப்படறது ரொம்ப தப்பு. நேரம் நெருங்குது. ஜோதி பிரகாசமா எரியுது. பண்டிகைக்கு பிரியாணி ஆகாம தப்பிச்ச குஷி. ஒரே உளறல். Basement Weak.

கேள்வி கேட்டா பதில் சொல்லணும். உனக்கு யார் தகவல் குடுத்ததுன்னு கேக்கிறது பயத்தின் வெளிப்பாடு. அகந்தை ஆம் இல்லை இதான் பதில். சம்பாதிச்சு பதுக்கலாமுன்னு போன இடத்துல ஹெட் ஆபீஸ் மேனேஜர் எல்லாத்தையும் மரியாதையா திருப்பி குடுத்துடுன்னு மிரட்டி எடுத்துட்டாங்கன்னு சோகக்கதையை சொல்ல முடியுமா. இவ்வாறு எஸ்வி சேகர் பதிவிட்டுள்ளார்.
கேள்வி கேட்டா பதில் சொல்லணும். உனக்கு யார் தகவல் குடுத்ததுன்னு கேக்கிறது பயத்தின் வெளிப்பாடு. அகந்தை ஆம் இல்லை இதான் பதில். சம்பாதிச்சு பதுக்கலான்னு போன இடத்துல ஹெட் ஆபீஸ் மேனேஜர் எல்லாத்தையும் மரியாதையா திருப்பி குடுத்துன்னு மிரட்டி எடுத்துட்டங்கனு சோகக்கதையை சொல்ல முடியுமா. pic.twitter.com/Iseod8VRwo
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) June 29, 2023
அண்ணாமலை மீது மறைமுக விமர்சனம்?: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி சென்னை விமான நிலையத்தில் பேட்டி கொடுத்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு கடும் அதிருப்தியுடனும் கோபத்துடனும் அண்ணாமலை பதில் அளித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இப்பின்னணியில் நடிகர் எஸ்வி சேகர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications