Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரத்குமார் கிளப்பிய பரபரப்பு.. ஆபாச வெப்சைட்கள் மொத்தமா முடங்குதா.. எல்லாமே சூதாட்டம்.. அப்படின்னா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ள நிலையில், அது தொடர்பாக புதிய கோரிக்கை ஒன்றை நடிகர் சரத்குமார் முன்வைத்திருக்கிறார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடி பணமிழந்து, கடனாளியாகி, கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டனர்.

அதனால், மனித உயிர்களை காவு வாங்கும் இப்படிப்பட்ட ஆப்களை முற்றிலுமாக தடை செய்யும் மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆன்லைன் தடை சட்டத்திற்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து நிராகரித்துக்கொண்டே இருந்தார்..

Actor sarathkumar urgent request to union government over the online rummy ban: Porn websites

சரத்குமார்: இதையடுத்து, தமிழக அரசியலில் பல்வேறு அதிர்வுகளை கிளப்பியது இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரம். பிறகு, தமிழக அரசின் பலகட்ட அழுத்தங்களுக்கு பிறகு இதற்கு ஒருவழியாக ஒப்புதல் வழங்கியிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ரவி. அதைத் தொடர்ந்து இப்போது ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்டத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் விளம்பரத்தில் சமக தலைவரும் நடிகருமான சரத்குமார் நடித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இதுகுறித்து சரத்குமார், "ரம்மி ஒரு புத்திசாலித்தனமான விளையாட்டு. நான் அந்த விளம்பரங்களில் நடித்ததற்காக இதைச் சொல்லவில்லை. ரம்மி விளையாட புத்திசாலித்தனம் வேண்டும். ஒருவன் எதையாவது செய்ய விரும்பவில்லை என்றால், அவன் அதை செய்யவே மாட்டான். நான் விளம்பரத்தில் நடித்ததால் மக்கள் விளையாடுவதில்லை. நான் கேட்டதற்காக அவர்கள் எனக்கு வாக்களித்தார்களா? மதுவிலக்கு கோரியும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தக் கோரியும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது சரத்குமார் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆபாச வெப்சைட்கள்: ஆன்லைன் ரம்மியை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்தச் சொல்லி எந்தப் பயனும் இல்லை என்றும் சரத்குமார் கூறியிருந்த நிலையில், இப்போது, முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.. சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொள்ளாச்சியைச் சேர்ந்த சபாநாயகம் என்பவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட செயலியால் சுமார் ரூ.90 லட்சம் தொகையை இழந்த வேதனையில் தற்கொலை செய்து கொண்ட செய்தி வேதனையளிக்கிறது.

சூதாட்டத்துக்கு தடை என்று சொல்லும்போது, அனைத்துவித ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை விதித்திட வேண்டும். முக்கியமாக நான் ஏற்கெனவே பலமுறை தெரிவித்தது போல, இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். சரத்குமாரின் இந்த வேண்டுகோள் தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் விவாதமாகி வருகிறது.

Actor sarathkumar urgent request to union government over the online rummy ban: Porn websites

போர்னோகிராபி: போர்னோகிராஃபி உள்ளிட்ட செயலிகள் மற்றும் இணையதளங்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. ஏற்கனவே ஒரு பேட்டியில் சரத்குமார் சொல்லும்போது, ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல, ஆபாச பட வெப்சைட்கள் மற்றும் மதுவும் தடை செய்யப்பட வேண்டும், நீங்கள் தடை செய்தால் நான் ஏன் நடிக்க போகிறேன் என கேள்வி எழுப்பியிருந்தார், கிரிக்கெட் சூதாட்டத்தில்கூட தோனி, விராட் கோலி நடிக்கிறார்கள். இதையெல்லாம் தடை செய்தால் யார் நடிக்க போகிறார்கள்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+