சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயேன் சென்ற கார் விபத்து.. டிரைவர்கள் வாக்குவாதம்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் நடிகர் சிவகார்த்தியேகன் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. மத்திய கைலாஷ் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற கார் மீது மோதி சிவகார்த்தியேகன் கார் விபத்தில் சிக்கியது. இதனால் இரு கார் டிரைவர்களும் சாலையில் இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சாலை விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காரில் இருந்து இறங்கிய நடிகர் சிவகார்த்திகேயன், முன்னாள் நின்ற காரில் இருந்தவரிடம் சமாதானம் செய்து கார் சேதத்திற்கான தொகையினை நான் தருவதாக சொல்லியதாகவும், அதற்கு அந்த காரில் இருந்த பெண் எங்கள் மீது தான் தவறு இருக்கிறது என சொல்லி சமாதானம் ஆனதாக கூறப்படுகிறது.

பராசக்தி திரைப்பட பணிகள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் உள்ளார். கடைசியாக இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான மதராஸி படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வர இருக்கிறது. பராசக்தி படத்தினை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ரெட் ஜெயன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ளது. படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிவகார்த்திகேயன் கார் விபத்தில் சிக்கியது
இந்த படம் தொடர்பான வேலைகளில் சிவகார்த்திகேயன் பரபரப்பாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தான், சென்னை மத்திய கைலாஷ் அருகே சிவகார்த்தியேகன் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. முன்னாள் சென்ற கார் மீது சிவகார்த்திகேயன் கார் மோதியது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கார்களில் மட்டும் சேதாரம் ஏற்பட்டது. இதனால் இரண்டு கார்களின் டிரைவர்களும் மாறி மாறி வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை பார்த்தது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் அங்கு வந்து அவர்களிடம் விசாரிக்க தொடங்கினர்.
காரில் இருந்து இறங்கி வந்த சிவகார்த்திகேயன்
இதையடுத்து காரில் இருந்து இறங்கிய நடிகர் சிவகார்த்திகேயன், முன்னாள் நின்ற கார் உரிமையாளரிடம் சென்று காரில் சேதம் ஏற்பட்டு இருந்தால் அதற்கான தொகையை தந்துவிடுவதாக சொல்லியதாகவும், அதற்கு அந்த காரில் இருந்த பெண், இல்லை.. இல்லை.. எங்கள் மீது தான் தவறு என்று கூறியதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
போலீசார் விசாரணை
இரு தரப்பினரும் சமாதானமாக சென்றதாகவும், இதனால் புகார் எதுவும் தரப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் காரில் இருந்து இறங்கியதால் அங்கு மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டதும் போக்குவரத்து நெரிசல் சீரானது. இந்த விபத்து தொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications