சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயேன் சென்ற கார் விபத்து.. டிரைவர்கள் வாக்குவாதம்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் நடிகர் சிவகார்த்தியேகன் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. மத்திய கைலாஷ் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற கார் மீது மோதி சிவகார்த்தியேகன் கார் விபத்தில் சிக்கியது. இதனால் இரு கார் டிரைவர்களும் சாலையில் இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சாலை விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காரில் இருந்து இறங்கிய நடிகர் சிவகார்த்திகேயன், முன்னாள் நின்ற காரில் இருந்தவரிடம் சமாதானம் செய்து கார் சேதத்திற்கான தொகையினை நான் தருவதாக சொல்லியதாகவும், அதற்கு அந்த காரில் இருந்த பெண் எங்கள் மீது தான் தவறு இருக்கிறது என சொல்லி சமாதானம் ஆனதாக கூறப்படுகிறது.

பராசக்தி திரைப்பட பணிகள்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் உள்ளார். கடைசியாக இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான மதராஸி படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வர இருக்கிறது. பராசக்தி படத்தினை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ரெட் ஜெயன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ளது. படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிவகார்த்திகேயன் கார் விபத்தில் சிக்கியது
இந்த படம் தொடர்பான வேலைகளில் சிவகார்த்திகேயன் பரபரப்பாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தான், சென்னை மத்திய கைலாஷ் அருகே சிவகார்த்தியேகன் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. முன்னாள் சென்ற கார் மீது சிவகார்த்திகேயன் கார் மோதியது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கார்களில் மட்டும் சேதாரம் ஏற்பட்டது. இதனால் இரண்டு கார்களின் டிரைவர்களும் மாறி மாறி வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை பார்த்தது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் அங்கு வந்து அவர்களிடம் விசாரிக்க தொடங்கினர்.
காரில் இருந்து இறங்கி வந்த சிவகார்த்திகேயன்
இதையடுத்து காரில் இருந்து இறங்கிய நடிகர் சிவகார்த்திகேயன், முன்னாள் நின்ற கார் உரிமையாளரிடம் சென்று காரில் சேதம் ஏற்பட்டு இருந்தால் அதற்கான தொகையை தந்துவிடுவதாக சொல்லியதாகவும், அதற்கு அந்த காரில் இருந்த பெண், இல்லை.. இல்லை.. எங்கள் மீது தான் தவறு என்று கூறியதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
போலீசார் விசாரணை
இரு தரப்பினரும் சமாதானமாக சென்றதாகவும், இதனால் புகார் எதுவும் தரப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் காரில் இருந்து இறங்கியதால் அங்கு மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டதும் போக்குவரத்து நெரிசல் சீரானது. இந்த விபத்து தொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications