சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெடுஞ்சானாக காலில் விழுந்து... கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்த நடிகர் சிவகார்த்திகேயன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தமிழக அரசின் 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான கலை மாமணி விருதுகள் சென்னை தலைமை செயலகத்தில் இன்று வழங்கப்பட்டது. இவ்விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

என்னை பார்த்து 'அந்த' கேள்வியை கேட்கிறதே ஆச்சரியமா இருக்கே அரசியல் என்ட்ரி குறித்து சிவகார்த்திகேயன்என்னை பார்த்து 'அந்த' கேள்வியை கேட்கிறதே ஆச்சரியமா இருக்கே அரசியல் என்ட்ரி குறித்து சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், தமிழக மக்களுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி என கூறி இருந்தார்.

Actor Sivakarthikeyan gets blessings from Mother for Kalaimamani Award

அத்துடன் இல்லாமல் வீட்டுக்கு சென்ற சிவகார்த்திகேயன், தாயின் காலில் நெடுஞ்சானாக விழுந்து வணங்கி தான் பெற்ற கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்தார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி!

தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

English summary
Actor Sivakarthikeyan gets blessings from Mother for Kalaimamani Award.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X