செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் போனை தட்டி விட்ட சம்பவம்.. வருத்தம் தெரிவித்தார் நடிகர் சிவக்குமார்
Recommended Video

சென்னை: மதுரையில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டி விட்டதற்கு நடிகர் சிவக்குமார் வருத்தம் தெரிவித்தார்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டனர்.
அப்போது திறப்பு விழா இடத்துக்கு வந்த சிவக்குமாரை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்களில் ஒருவர் உள்ளே வந்து சிவக்குமார் வந்து கொண்டிருக்கும் போது செல்பி எடுக்க முயன்றார். உடனே யாரும் எதிர்பாராத வேளையில் சிவக்குமார் அவரது போனை தட்டி விட்டார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த ரசிகர் யாரிடமோ இதுகுறித்து முறையிட்டார்.
[கெளரவம் பார்க்காமல் ஸாரி சொன்ன சிவக்குமார்... பெரிய மனுஷன், பெரிய மனுஷன்தான்]

வேண்டுமானாலும்
இந்நிலையில் சிவக்குமாருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன. செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டதற்கான காரணத்தை சிவக்குமார் கூறியுள்ளார். அதில் செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.
[சிவகுமார் விளக்கம் கொடுத்தாலும் விடாமல் துரத்தும் மீம்ஸ்.. இதை பாருங்க]

நியாயமா
அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி எடுக்கிறேன் என்று நடக்கக் கூட முடியாமல் செய்வது நியாயமா?

நெட்டிசன்கள்
தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீர்களா? விஐபி என்றால் தான் சொல்லும்படி தான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? என்றார். இந்நிலையில் சிவக்குமார் மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.
|
வீடியோ வெளியீடு
இந்த நிலையில் சிவக்குமார் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ஆர்வமிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு அப்படிதான் நடந்து கொள்வார்கள். பிரபல கலைஞர் அதையெல்லாம் பொருத்து கொள்ளத்தான் வேண்டும். மக்கள் தவறு என நினைக்கும் பட்சத்தில் உளமாற வருத்தம் கேட்கிறேன் என்றார் சிவக்குமார்.












Click it and Unblock the Notifications