நடிகர் விஜய் வருமான வரி வழக்கில் வைத்த வாதம்.. இதுவும் ஊழல் தானே.. பாயிண்டை பிடித்த நெட்டிசன்கள்
சென்னை: தமிழக அரசியல் களத்தில் முதல் முறையாக இறங்கியுள்ள நடிகர் விஜய்க்கு, சட்ட ரீதியாகப் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விஜய்க்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த 2015-16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தார். அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது வருமான வரித்துறை. அதில் 'புலி' படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை கண்டறிந்தது.

விஜய்க்கு 1.50 கோடி அபராதம்
மேலும் வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது
அபராதம் செல்லும்
இந்த வழக்கில் விஜய் தரப்பு வாதிடுகையில், சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும், ஆனால் காலதாமதமாக 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் வருமான வரிச்சட்டப்படி விஜய்-க்கு அபராதம் விதித்தது சரிதான் என வருமான வரித்துறை வாதிட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்திந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார ராமமூர்த்தி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து அவருக்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என்றும் உத்தரவிட்டார்.
இது ஊழல் இல்லையா
விஜய் தரப்பு வாதிட்டதை வைத்து விமர்சிக்கும் நெட்டிசன்கள், வருமானத்தை விஜய் மறைத்தது உண்மை தானே என்று கேள்வி எழுப்பினார்கள். இப்போது இந்தத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விஜய்க்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. "மக்களுக்கு நல்லது செய்யப் போகிறேன் என்று அரசியலுக்கு வந்திருக்கும் ஒருவர், தனது சொந்த வருமானத்தையே முறையாகக் காட்டாமல் வரியை மறைத்தது ஏன்?" என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். வரியைச் சரியாகச் செலுத்தாதது ஒரு வகை நிதி முறைகேடு அல்லது ஊழல் இல்லையா? என்ற விவாதங்களை கிளப்பி வருகின்றனர்.
டிக்கெட் விலை சர்ச்சை
இதற்கிடையே, விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகும் போது தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. அதேபோல் படம் வெளியாகும் அன்று 2000 வரை டிக்கெட் கட்டணம் விற்கப்படும் நிலையில, அது குறித்து விஜய் எந்தக் குரலும் கொடுப்பதில்லை என்பதும் அவர் மீதான மற்றொரு புகாராக இருந்து வருகிறது.
நடிகர் விஜய்க்கு பின்னடைவு
"சாதாரண ரசிகர்களின் பாக்கெட்டைப் பாதிக்கும் டிக்கெட் விலை உயர்வைக் கண்டிக்காத விஜய், இப்போது வருமான வரிச் சிக்கலிலும் மாட்டிக்கொண்டிருப்பது அவரது அரசியல் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும்" என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், வருமானத்தை மறைத்ததற்காக விதிக்கப்பட்ட அபராதம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நடிகர் விஜய்க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
பிரசாரத்தை திடீர் திடீரென ரத்து செய்யும் விஜய்! புரசைவாக்கம் ரோடு ஷோவும் ரத்தால் தொண்டர்கள் ஏமாற்றம் -
ஜனநாயகன் லீக் செய்தது விஜயா? மனசாட்சி வேண்டும்! 500 கோடி! ஆதங்கத்துடன் பேசிய பிக் பாஸ் பிரஜன் -
ரோடு ஷோவை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு கோவை திரும்பிய விஜய்.. தவெக தொண்டர்கள் கடும் ஏமாற்றம் -
திருப்பூர் விஜய் கூட்டத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 9 பேர்.. வேட்பாளர் சுகுமாரும் மயக்கம் -
இந்த 2ல் ஒன்று நடந்தால்.. போச்சு.. விஜய் வைக்க போகும் செக் யாருக்கு? யோசிக்க முடியாத கோணமா இருக்கே? -
சொன்னா கேளுங்களே முடியலை.. திருப்பூருக்கு வரும் தவெக விஜய்! கடைசி வரை இழுபறி! ஆனந்த் சொன்ன வார்த்தை! -
அதைத் தாண்டி யாரும் வரக்கூடாது.. திருப்பூர் கூட்டத்தில் திடீரென டென்ஷனான விஜய் -
விஜய்யை பார்க்க வீட்டில் சொல்லாம கொள்ளாம வந்த பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்.. 5 பவுன் செயின் திருட்டு! -
அனுபவம் இல்லாதவரிடம் நாட்டை கொடுக்காதீங்க.. பெரம்பூருக்கே போய் விஜய்யை அட்டாக் செய்த திவ்யா சத்யராஜ் -
தவெகவில் ஒரே ஒரு எம்.எல்.ஏ? நிலைமை என்ன ஆகும்? - சட்டசபையில் சமாளிப்பாரா விஜய்? -
விஜய்யின் "கழுகு பார்வை"! சல்மான், ஷாரூக் டோம் குரூஸ்ஸின் ஃபேவரைட் பவுன்சர்! யார் இந்த நயீம் மூசா? -
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி ஏன் இழுபறி? விஜய்யின் பயிர்க்கடன் வாக்குறுதியில் எழும் சந்தேகங்கள் என்ன?












Click it and Unblock the Notifications