Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநரை பார்க்க வண்டியை விட்ட தவெக தலைவர் விஜய்! அரவணைக்கும் அண்ணாமலை! பரபர பாலிடிக்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியை, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்து மனு அளித்தார். இந்த நிலையில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை குறித்து ஆளுநரை விஜய் சந்தித்து பேசியதை வரவேற்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அதே கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

actor vijay rn ravi annamalai

இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் மறைவான இடத்தில் அந்த மாணவியும் அவரது காதலனும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் மாணவனை கடுமையாக தாக்கி விட்டு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

அண்ணா பல்கலை கழகம்:

மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஞானசேகர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி பாலியல் வன்கொடுமை:

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை (FIR) லீக் ஆனது. இதனையடுத்து இந்த விவகாரத்தை கையில் எடுத்த உயர்நீதிமன்றம், சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே பல அரசியல் கட்சி தலைவர்களும் திமுக தலைமையிலான தமிழக அரசு மீது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

ஆளுநர் - விஜய் சந்திப்பு:

இந்தநிலையில் அண்ணா பல்கலை கழக சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் தன் கையால் எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார் இந்த நிலையில் இன்று அவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்து பேசியதோடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் அனைத்திடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதாக கூறப்படுகிறது தமிழ்நாடு அரசியலில் இந்த சந்திப்பு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

அண்ணாமலை வரவேற்பு:

இந்த நிலையில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பின்மை குறித்து ஆளுநரை விஜய் சந்தித்து பேசியதை வரவேற்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,” அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்:

இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் திரு. விஜய் அவர்களும், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம். வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.” என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+