Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு.. பரபரத்த வாதம்.. சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

விஜய்சேதுபதி வழக்கு விவகாரத்தில் சென்னை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூரூ ஏர்போர்ட்டில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 2-ந்தேதி பெங்களூரு ஏர்போர்ட்டில், நடந்து வந்து கொண்டிருந்த நடிகர் விஜய் சேதுபதியை, மகா காந்தி என்ற நபர் திடீரென தாக்கினார்.. அது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாவிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாகாந்தி, மைசூரில் தனக்கு மெடிக்கல் செக்கப் செய்து கொள்வதற்காக சென்றுள்ளார்.. அப்போதுதான் அதே ஏர்போர்ட்டில் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்துள்ளார்..

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி


அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்தும் தெரிவித்தார்.. ஆனால், தன்னுடைய வாழ்த்துகளை விஜய் சேதுபதி ஏற்க மறுத்ததாக கூறினார்.. பிறகு, பொதுவெளியில் இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்... அந்த மனுவில் உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜான்சன்

ஜான்சன்

எனவே நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்... அந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் 2 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தனர்.

விளம்பரம்

விளம்பரம்

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது விஜய் சேதுபதி தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சென்னையில் தொடர்ந்தது, அதை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது, இயந்திரத்தனமாக உடனடியாக சம்மன் அனுப்பியது, சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு என அடுத்தடுத்த தவறுகள் நடந்துள்ளதாக வாதிட்டார். விளம்பர நோக்கத்துடன், மூன்று கோடி இழப்பீடு கேட்டுள்ளதால், அதிகப்படியான அபராதத்துடன் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார்.

மகா காந்தி

மகா காந்தி

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி சத்தி குமார் சுகுமார குரூப், மகா காந்தியை தாக்கியதாக விஜய் சேதுபதி மீதான பதிவான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், விஜய் சேதுபதி மீதான அவதூறு வழக்குக்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+