“ஷாக்”.. விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு.. கவலையோடு சொன்ன மகன்! தேமுதிக தொண்டர்களுக்கு அதிர்ச்சி
சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவாக இருப்பதாக அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்து இருக்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், "விருதுநகருக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்தேன். அது முடிந்த பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தேன். அதிமுக கட்சிக்கு உள்ளேயே பிரச்சனை பெரிதாக இருந்துகொண்டு இருக்கிறது.

நான் பெரிய ஆளா? நீ பெரிய ஆளா? என்பதாகவே இந்த மாநாட்டை நான் பார்க்கிறேன். மற்ற கட்சிக்கு தேமுதிகவில் இருந்து விலகி செல்பவர்கள் காசு வாங்கிவிட்டு செல்கிறார்கள். அவர்கள் மீது எப்படி எங்களுக்கு மதிப்பு வரும். இங்கு இருக்கும் வரை அண்ணி என்றும் தம்பி என்றும் சொல்வார்கள். வேறு கட்சிகளுக்கு சென்றபிறகு அந்நியவாதியாக தெரிவார்கள்.
தேமுதிகவில் இருப்பவர்கள் மட்டும் கட்சி தாவவில்லை. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்று தற்போது சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜி தற்போது சிறைக்கு சென்று இருக்கிறார். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் நீட் தேர்வு அமலில் உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல் மாணவர்களுக்கு சரியானதை சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டை விட பின் தங்கிய மாநிலங்களில் கூட நீட் தேர்வால் உயிரிழப்பது குறைவாக இருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக அரசு பொய்யான வாக்குறுதியை கூறுவதால்தான் மாணவர்களுக்கு மேலும் அழுத்தம் வருகிறது.

விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவாக உள்ளது. ஆனால், அவர் 100 ஆண்டுகள் வாழும் அளவுக்கு நன்றாக இருப்பார். முன்பை போன்று அவர் பேசவும், எழுந்து வருவும் வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். உங்களை போன்றே நாங்களும் அவர் நலமுடன் வருவார் என்று நம்பிக்கை வைத்து உள்ளோம்.
இன்று வரை விஜயகாந்த் நலமாகவே இருந்து வருகிறார். "முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது" என்பதே விஜயகாந்தின் மந்திரம். எங்களின் தாரக மந்திரமாகவும் அதையே சொல்கிறோம். எனது கனவை ஓரம்கட்டிவிட்டு தொண்டர்களுக்காகவே ஓடோடி வந்து வேலை செய்து வருகிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications