சிக்ஸர் விளாசிய விஜய்.. இன்று உலக பட்டினி தினம்.. தமிழகம் பூராவும் அன்னதானம்.. கவனித்த திராவிட கட்சி
சென்னை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் பிறப்பித்திருக்கிறார்.
சமீபத்தில்தான் நடிகர் விஜய் கட்சியை துவங்கியிருக்கிறார்.. இந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், வரப்போகும் 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

உறுப்பினர்கள்: அதற்கேற்றவாறு, 2 மாதங்களுக்கு முன்பு 2 கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனத்தை அக்கட்சி செலுத்தி வருகிறது. அத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், இன்றைய தினம் அதாவது மே 28ம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்றைய தினம், தேதி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க, நடிகர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தும் 2 நாட்களுக்குமுன்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
விஜய் அதிரடி: அதில், "தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, பட்டினி இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலக பட்டினி தினத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் உரிய தேர்தல் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி, அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி, இன்று காலையிலேயே இதற்கான ஏற்பாடுகளை விஜய் கட்சி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.. பட்டினி இல்லா உலகம் வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு, பொதுமக்களின் ஆதரவை பெற்று வருகிறது..
சட்ட உதவிகள்: அதுமட்டுமல்ல, ஏழை, எளியோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் புகார் அளிப்பதற்கும், சட்ட உதவி அளிப்பதற்கு ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் 2 வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று விஜய் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்ததையும், தமிழக அரசியல் கட்சிகள் கவனிக்காமல் இல்லை. மொத்தத்தில் விஜய்யின் நடவடிக்கைகள் பலரையும் கவனிக்க செய்து வருகிறது.
அதேசமயம், இன்று ஒருநாளில், அதுவும் ஒருவேளைக்கு மட்டும் அன்னதானம் வழங்குவதைவிட, ஏழைகள் தொழில் துவங்கவும், அவர்களுக்கு நிரந்தரமாக உணவு கிடைக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்தால் நல்லா இருக்குமே என்று பலரும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் எழுப்பி வருகிறார்கள்...!!
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications