நடிகர் கார்த்தி அரசியலுக்கு போகலாம்! கிளப்பிவிட்ட நடிகர் விக்ரம்! பெரிய கும்பிடு ஒன்று போட்டு எஸ்கேப்!
சென்னை: அரசியலுக்கு செல்வதற்கான தகுதி நடிகர் கார்த்தியிடம் நிறையவே உள்ளதாக கூறி, பொன்னியின் செல்வன் 2 திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் விக்ரம்.
நடிகர் விக்ரம் பேசுவதை கேட்ட கார்த்தி, ஐயையோ ஆள விடுங்கப்பா சாமி என்பது போல் ஒரு ரியாக்ஷனை கொடுத்துவிட்டு பெரிய கும்பிடு ஒன்று போட்டார்.
இதனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் மொத்த டீமும் விழுந்து விழுந்து சிரித்தது.

நடிகர் கார்த்தி மேடையில் பேசினார் என்றால் தமிழ் உச்சரிப்பு பிரமாதமாக இருக்கும் என்று புகழ்ந்த நடிகர் விக்ரம், எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற மனதுக்கு சொந்தக்காரர் கார்த்தி எனக் குறிப்பிட்டார்.
நடிகர் விக்ரம் கூறியதை போல் நடிகர் கார்த்தி ஏற்கனவே பல்வேறு அறப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருவது கவனிக்கத்தக்கது. குறிப்பாக உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை சத்தமின்றி செய்து வருகிறார்.
அதுமட்டுமின்றி தனது அண்ணன் நடிகர் சூர்யாவுடன் இணைந்து அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களின் கல்விச் செலவுகளையும் எந்த விளம்பரமும் இல்லாமல் கவனித்து வருகிறார்.
தற்போது நடிகர் சங்கப் பொறுப்பில் உள்ள இவர் நலிந்த கலைஞர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். இதன் காரணமாக தான் அவரை அரசியலுக்கு செல்லத் தகுதியானவர் என நடிகர் விக்ரம் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
நடிகர் கார்த்தியை பொறுத்தவரை அவருக்கு நேரடியாக அரசியல் ஆர்வம் இல்லாவிட்டாலும் கூட அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உதாரணத்துக்கு அண்மையில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து படித்து பார்த்த கார்த்தி, தமிழக அரசை பாராட்டியதோடு இன்னும் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் கோரிக்கை விடுத்திருந்தார்.
-
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
டோண்ட் வொரி.. உங்களுடன் இருப்பேன்.. விஜய்க்கு போனை போட்ட ராகுல்? உண்மையில் அப்படி என்ன நடந்தது? -
விஜய் உடன் மல்லுக்கட்டும் இனிகோ இருதயராஜ்.. திருச்சி கிழக்கு திமுக வேட்பாளரின் பலம், பலவீனம் என்ன? -
தேர்தலுக்கு முன்பே அதிமுக வசமாகும் கோவையின் 2 தொகுதிகள்? பரிதாப நிலையில் காங்கிரஸ்.. என்ன நடக்கிறது? -
என் மூச்சு இருக்கும் வரை.. அன்புமணியுடன் சமாதானம் என்ற பேச்சிற்கே இடமில்லை.. ராமதாஸ் ஆவேசம்! -
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம் - எடப்பாடி சொன்ன சீக்ரெட்! -
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியிலிருந்து ஹசீனா சையத் நீக்கம் -
தேமுதிக அதிர்ச்சி வைத்தியம்! பார்த்தசாரதிக்கு 'சீட்' மறுப்பு! கட்சி தாவுகிறாரா மாஜி எம்எல்ஏ? -
“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு -
ராமதாஸ் தரப்புக்கு பெரிய அடி.. மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்! -
'சைலண்ட்' வாக்குகள்! இனி மாநாடுகள் போட்டு பயனில்லை.. கேரளாவின் தலையெழுத்தை தீர்மானிக்க போவதே இதுதான் -
போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி












Click it and Unblock the Notifications