இதோடு நிறுத்திக்கோங்க.. நான் அப்படியா சொன்னேன்.. பாலியல் சீண்டலை மறுத்த கவுரி கிஷன்!
சென்னை: பாலியல் சீண்டல்கள் எனக்கு நடக்கவில்லை, எனது நண்பர்களுக்குத்தான் நடந்தது என நடிகை கவுரி கிஷன் விளக்கமளித்துள்ளார்.
பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த பாலியல் அத்துமீறல் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அடுத்தடுத்து ஒவ்வொரு பள்ளியின் ஆசிரியர்கள் மீது முன்னாள் மாணவிகள் புகார் அளித்து வருகிறார்கள்.
'தலைசிறந்த கல்வியாளர்' அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மு. அனந்தகிருஷ்ணன் கொரோனாவால் காலமானார்!
பிஎஸ்பிபி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் 96 படத்தில் ஜானுவாக நடித்த கவுரி கிஷன் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அடையாறு
அந்த வீடியோவில் அடையாறில் உள்ள இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் படித்த போது ஆசிரியர்கள் சிலர், மாணவ மாணவிகளை அசிங்கமாக திட்டுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது போன்ற கொடுமைகளை அனுபவித்ததாக அவர் தெரிவித்தார்.
பாலியல் சீண்டல்
இதையடுத்து கவுரி கிஷனும் பள்ளியில் படித்த போது பாலியல் சீண்டலுக்குள்ளானதாக செய்திகள் வெளியாகின. இதை பார்த்த சிலர் கவுரியிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பியிருந்தனர். இதை கவுரி கிஷன் மறுத்துள்ளார்.
கசப்பான அனுபவங்கள்
இதுகுறித்து அவர் கூறுகையில், நண்பர்களின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்த இடத்தில் நான் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனக்கு பாலியல் ரீகியான எந்த துன்புறுத்தலும் நடக்கவில்லை.
பிஎஸ்பிபி
ஊடகங்கள் பிஎஸ்பிபி பள்ளியுடன் என்னை தவறாக இணைக்கிறார்கள். இதோடு இதை நிறுத்திக் கொள்ளுங்கள் என கவுரி கிஷன் தெரிவித்துள்ளார். பள்ளி ஆசிரியர்களின் பாலியல் சீண்டல்கள் குறித்தும் திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்கள் கண்டனங்கள் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.