வீட்டில் சுயநினைவின்றி கிடந்த இலக்கியா எப்படி இருக்கிறார்? திலீப் சுப்பராயன் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: தன்னை ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி அதிகளவு ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படும் இலக்கியா, எப்படி இருக்கிறார் என்பதை பார்க்கலாம். அது போல் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டாரா என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
டிக்டாக், இன்ஸ்டா பிரபலம் இலக்கியா. அரைகுறை ஆடை, கவர்ச்சியான உடல் அசைவுகள், உடைகள் அணிந்திருந்த டிக்டாக் இலக்கியா, சமையல் சேனலை தொடங்கி தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 6 ஆண்டுகளாக சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயனுடன் தொடர்பில் இருந்து வந்தது தெரியவருகிறது. இலக்கியா அண்மையில்தான் காட்டுப்பாக்கத்தில் புதிதாக வீடு கட்டி கிரகபிரவேசம் செய்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு இன்ஸ்டா ஸ்டோரியில் இலக்கியா ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும்தான் காரணம். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டான். 6 ஆண்டுகளாக அவன் கூட நான் இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்ககூட பழக்கம். அதைத் தட்டிக் கேட்ட என்னை போட்டு அடிக்கிறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால் முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடிஅடினு அடிப்பான்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஸ்டோரியில் திலீப்பின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். கோட், வலிமை உள்ளிட்ட படங்களுக்கு ஸ்டன்ட் மாஸ்டராக இருந்த தீலப் மீது இத்தகைய குற்றச்சாட்டு வைக்கப்பட்டது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இலக்கியா, அந்த இன்ஸ்டா ஸ்டோரியை திடீரென டெலிட்டும் செய்துவிட்டார். இதையடுத்து நேற்று மதியம் காட்டுப்பாக்கம் வீட்டில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது. இதையடுத்து ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவருடன் இருந்த நபர், இலக்கியா தூக்கிக் கொண்டு போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் அதிக மது போதையில் இருப்பதாகவும், நிறைய மாத்திரைகளை சாப்பிட்டதாகவும் தெரிவித்தனர்.
எனவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதென்றாலும் செல்லுங்கள் என்றனர். ஆனால் இலக்கியாவுடன் வந்த நபர், இந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை கொடுங்கள் என சொல்லி விட்டாராம்.
இதனிடையே திலீப் சுப்பராயன், எனக்கும் இலக்கியா தற்கொலை முயற்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை இதில் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் இலக்கியாவுக்கு இன்று இரண்டாவது நாளாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அவரது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து மருத்துவமனை தரப்பிலோ அல்லது இலக்கியா தரப்பிலோ எந்த தகவலும் வரவில்லை.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications