ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான்.. மாணவர்கள் முன் சொன்ன நடிகை நமீதா.. தட்டிக்கொடுத்த தமிழிசை!
வேலூர்: இளைஞர்கள் தாய்மொழியை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறியுள்ள நடிகை நமீதா, ஆங்கிலம் தெரிந்தால் நல்லது தான் என்றும் தெரிவித்துள்ளார். தன் வீட்டில் குழந்தைகளுடன் ஆங்கிலத்தில் பேசுவதில்லை என்று கூறிய அவர், தாய்மொழியில் மட்டுமே பேசி வருவதாக கூறி இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலம் பேசுவோர் வெட்கி தலை குனியம் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் நமது கலாச்சாரத்திற்கு ஆபரணம் போன்றதாகும். ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழியில் நமது பாரம்பரியம், வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடியாது.

அமித் ஷா கருத்து
அரைகுறையான வெளிநாட்டு மொழியால் நாம் ஒருபோதும் முழுமையான இந்தியா என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த பேச்சு நாடு முழுவதும் புதிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் ஏழை குழந்தைகள், மாணவர்கள் ஆங்கிலம் கற்பனை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை.
ராகுல் காந்தி பதிலடி
ஏழைகள் கேள்வி கேட்பதையோ அல்லது முன்னேறுவதையோ சரிசமமாக மாறுவதையோ அவர்கள் விரும்பவில்லை. ஆங்கிலம் என்பது வெட்கக்கேடு அல்ல.. அதுவொரு அதிகாரம் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆங்கிலம் தொடர்பாக அமித்ஷா பேசியது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். அவர் தாய்மொழியை ஆதரித்து இப்படியொரு கருத்தை பேசியதாக தெரிவித்தார்.
அன்பில் மகேஷ் பதிவு
தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், ஆங்கிலத்தை உயர்குடியினருக்கானதாக சித்தரிக்க விரும்புகிறார்கள். ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் எழுச்சி பெற ஆங்கிலம் அதிகாரம் அளிப்பதாலேயே இதை செய்கிறார்கள். ஆங்கிலம் காலனித்துவ நினைவுச்சினல்ல அல்ல. அது முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி என்று தெரிவித்தார்.
நமீதா பேச்சு
இந்த நிலையில் சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற யோகா செய்யும் நிகழ்ச்சியில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதா கலந்து கொண்டார். அப்போது நடிகை நமீதா பேசுகையில், என் குழந்தைகளோடு நான் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை. என் தாய்மொழியில் மட்டும்தான் பேசுவேன்.
ஆங்கிலம் நல்லதுதான்
ஆனால் ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான். அதேபோல் தாய்மொழியின் கண்டிப்பாக தெரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு முடிவடைந்த பின், மாநில பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டு தெரிவித்தார். இந்த காட்சிகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
-
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications