நடிகை பூர்ணாவை கல்யாணம் செஞ்சிக்கிறீங்களா?.. நடிகை பெயரில் நூதன திருமண மோசடி கும்பல் சிக்கியது
சென்னை: நடிகை பூர்ணா தன்னை திருமணம் செய்வதாக மோசடி செய்ததை அறிந்து அந்த மோசடி கும்பலை போலீஸில் பிடித்து கொடுத்தார்.
நடிகை பூர்ணா தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.
இவருக்கு கடந்த 2, 3 ஆண்டுகளாக அவரது குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் எந்த வரனும் வராமல் இருந்தது. சில வரன்கள் எங்களுக்கு பிடிக்காமல் இருந்து வந்தது. பெண் பிள்ளையாயிற்றே, வயது அதிகமாகிறதே என அவரது தாய் கவலைப்பட்டதாக தெரிகிறது.

பூர்ணா
மேலும் சில வரன்கள் பூர்ணா நடிகையாக இருக்கிறார் என்பதற்காகவே தள்ளி போனது. இந்த நிலையில் ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த ஷானித் ஆசிஃப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. இந்த நிலையில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி பூர்ணா மீண்டது பரபரப்பாகியுள்ளது.

தள்ளிபோனது
இந்த நிலையில் பூர்ணா அளித்துள்ள பேட்டியில் எனது திருமணம் தள்ளி போனதால் வேறு ஜாதியிலோ மதத்திலோ வரன் தேடுகிறீர்களா என பலர் கேட்டனர். இது எனது தாயாருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. எனக்கு வரன் பார்க்க தொடங்கியதிலிருந்து எதுவும் அமையவில்லை. தற்போது திருமணமாகியுள்ளது. எனது தாயார் மகிழ்ச்சியாக உள்ளார்.

திருமண மோசடி
ஒரு கும்பல் என்னை திருமணம் செய்வதாக மோசடி செய்ததை போலீஸில் வெளிப்படுத்தி பிடித்து கொடுத்தேன். வரன் தேடும் போது மோசடி கும்பலில் இருந்து பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதற்காகதான் அந்த கும்பலை போலீஸில் சிக்க வைத்தேன். ஆனாலும் இது போன்ற மோசடி கும்பலில் இருந்து பெண்கள் ஏமாந்து வருகிறார்கள். அவர்கள் என்னிடம் ஏமாந்த கதையை கூறிய போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றார்.

மேட்ரிமோனி
வரன் பார்க்கும் போது அங்கீகாரம் பெறாத மேட்ரிமோனிகளில் பெண்கள் தங்கள் புகைப்படங்களுடன் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருக்கிறார், வீடியோ காலில் பார்த்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என யாராவது கூறினால் நம்பாதீர்கள். இதிலும் சில இடங்களில் மோசடி நடக்கிறது.

நகை, பணம்
இது போன்ற இடங்களில் சிக்குவதால்தான் நகை, பணத்தை பெற்றுக் கொண்டு மோசடிக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள். எனவே வரன் தேடும் போது அவசரம் காட்டாமல் இருக்க வேண்டும். வயது ஏறுகிறதே என அவசரம் காட்டினால் அந்த பெண் காலத்திற்கும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலை வரும். எனவே பெற்றோர் வரன் தேடுவதில் அவசரம் காட்ட கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. அதே வேளையில் ஆண்களையும் சில பெண்கள் ஏமாற்றி பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு அடுத்தடுத்து 6ஆவது திருமணம், 7ஆவது திருமணம் என்ற ரேஞ்சுக்கு செல்கிறார்கள். இவர்களிடமும் உஷாராக இருக்க வேண்டும்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications