Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. திடீரென வாபஸ் பெற்றார் நடிகை ராணி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார்.. வாபஸ் பெற்றார் நடிகை ராணி- வீடியோ

    சென்னை: நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி.

    வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். காதல் கோட்டை படத்தில் வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா என்ற பாட்டிலும் நடனமாடியுள்ளார். நாட்டாமை படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்து சரத்குமார் குடும்பத்தை கெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ராணி (44). இவர் நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தில் வரும் ஓ போடு பாடல் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார்.

    நடிகையின் கணவராக வருபவர்

    நடிகையின் கணவராக வருபவர்

    இதுதவிர நந்தினி சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் வடபழனி சாலிகிராமத்தில் அருணாசலம் சாலையில் கணவர் பிரசாந்துடன் தங்கியுள்ளார். கேளம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சண்முகராஜன் (55). நந்தினி சீரியலில் நடிகை ராணியின் கணவராக நடித்து வருகிறார்.

    படப்பிடிப்பு

    படப்பிடிப்பு

    கடந்த 11-ஆம் தேதி சென்னை வடபழனியில் தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகை ராணி சண்முகராஜனை கன்னத்தில் அறைவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது ராணியோ சண்முகராஜனை நிஜமாகவே அறைந்துவிட்டார்.

    சண்முகராஜன்

    சண்முகராஜன்

    இதனால் ஆத்திரமடைந்த சண்முகராஜன் ராணியிடம் தகராற்றில் ஈடுபட்டார். இதையடுத்து உடனிருந்தவர்கள் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தனர். இந்நிலையில் தொலைக்காட்சி தொடருக்காக சென்னை செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் தீபாவளிக்கு துணி எடுப்பது போல் ஒரு காட்சி நேற்று படமாக்கப்பட்டது. அப்போது ராணி, அவரது கணவர் பிரசாந்த், சண்முகராஜன் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது.

    வழக்கு பதிவு

    வழக்கு பதிவு

    இதையடுத்து கணவருடன் சென்னை செங்குன்றம் காவல் நிலையத்துக்கு சென்ற ராணி, கடந்த ஒரு வாரமாக தொலைக்காட்சி படப்பிடிப்பில் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    வாபஸ்

    வாபஸ்

    பின்னர் சண்முகராஜன் ராணியிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து செங்குன்றம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அவர் வாபஸ் பெற்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+