நடிகர் சண்முகராஜன் மீதான பாலியல் புகார்.. திடீரென வாபஸ் பெற்றார் நடிகை ராணி
Recommended Video

சென்னை: நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி.
வில்லுப்பாட்டுக்காரன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். காதல் கோட்டை படத்தில் வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா என்ற பாட்டிலும் நடனமாடியுள்ளார். நாட்டாமை படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்து சரத்குமார் குடும்பத்தை கெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ராணி (44). இவர் நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தில் வரும் ஓ போடு பாடல் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார்.

நடிகையின் கணவராக வருபவர்
இதுதவிர நந்தினி சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் வடபழனி சாலிகிராமத்தில் அருணாசலம் சாலையில் கணவர் பிரசாந்துடன் தங்கியுள்ளார். கேளம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சண்முகராஜன் (55). நந்தினி சீரியலில் நடிகை ராணியின் கணவராக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு
கடந்த 11-ஆம் தேதி சென்னை வடபழனியில் தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது நடிகை ராணி சண்முகராஜனை கன்னத்தில் அறைவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது ராணியோ சண்முகராஜனை நிஜமாகவே அறைந்துவிட்டார்.

சண்முகராஜன்
இதனால் ஆத்திரமடைந்த சண்முகராஜன் ராணியிடம் தகராற்றில் ஈடுபட்டார். இதையடுத்து உடனிருந்தவர்கள் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தனர். இந்நிலையில் தொலைக்காட்சி தொடருக்காக சென்னை செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் தீபாவளிக்கு துணி எடுப்பது போல் ஒரு காட்சி நேற்று படமாக்கப்பட்டது. அப்போது ராணி, அவரது கணவர் பிரசாந்த், சண்முகராஜன் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது.

வழக்கு பதிவு
இதையடுத்து கணவருடன் சென்னை செங்குன்றம் காவல் நிலையத்துக்கு சென்ற ராணி, கடந்த ஒரு வாரமாக தொலைக்காட்சி படப்பிடிப்பில் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வாபஸ்
பின்னர் சண்முகராஜன் ராணியிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து செங்குன்றம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அவர் வாபஸ் பெற்றார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications