'சித்தப்பா' கமல்.. அக்கறையோடு வாக்கு சேகரித்த சுஹாசினி.. ஒரு இடம் விடல..
சென்னை: கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகை சுஹாசினி மணிரத்னம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
2019 மக்களவை தேர்தலை சந்தித்து இருந்தாலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதன் முதலில் சந்திக்கும் சட்டசபைத் தேர்தல் இது. ஆகையால், தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கமலுக்கு உள்ளது. அதுமட்டுமின்றி, நகர்ப்புறங்களில் மட்டும் வாக்கு வங்கி உள்ளது என்ற பெயரையும் வழித்து துடைத்து எடுக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு உள்ளது.

சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். எனினும், சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கமல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஒன்றிலிருந்து மூன்று இடங்கள் வரை மட்டுமே மக்கள் நீதி மய்யம் வெற்றிப் பெறும் என்ற ரீதியில் தான் கருத்துக்கணிப்பு முடிவுகள் உள்ளன.
இருந்தாலும், எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாத கமல் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனின் மகளும், நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் தனது சித்தப்பா கமல்ஹாசனுக்காக மதுரை தெற்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

தொகுதியின் முக்கியமான அனைத்து இடங்களிலும் வலம் வந்த சுஹாசினி, மக்களை சந்தித்து கமல்ஹாசனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். காய்கறி மார்க்கெட், சந்தை, வீடுகள் என்று ஒரு இடம் விடாமல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு கோரினார்.












Click it and Unblock the Notifications