சென்னை பீச் டூ எழும்பூர்.. நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்.. அரசு சூப்பர் அறிவிப்பு
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயில் சேவைகள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நாளை (அக்டோபர் 27) பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புறநகர்ப் பகுதியில் உள்ள மின்சார ரயில்களில் தினமும் ஏராளமான பயணிகள் வேலைக்குச் செல்வதற்காகவும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். சென்ட்ரல் ஆவடி, வேளச்சேரி, பீச் - தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட செல்லும் வழிகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயங்கக்கூடிய மின்சார ரயில்கள் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்து வருகிறது. சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை பீச் - செங்கல்பட்டு வழித்தடத்தில் நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் பயணிகளின் வசதிக்காக சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக 23 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணியில் இருந்து 20 நிமிட இடைவெளியில் 23 சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும்.
இதைத்தொடர்ந்து, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நாளை (அக்டோபர் 27) பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போக்குரவத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி சென்னை கடற்கரை யார்ட்டில் அக்டோபர் 27 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனால், காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் - செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம்-செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் அக்டோபர் 27 ஆம் தேதியன்று சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது.
நாளை கடற்கரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், எழும்பூர் மற்றும் பூங்கா ரயில் நிலைய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Gold Price: தங்கம் விலை இன்று சரிந்தது.. சவரனுக்கு ரூ.800 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் ரேட் என்ன? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications