வேற லெவல்.. விண்வெளியில் ‛மாஸ்’ காட்டும் ஆதித்யா எல்-1 விண்கலம்! இஸ்ரோ சொன்ன சூப்பர் அப்டேட்.. செம
சென்னை: பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவை கடந்து விண்வெளியில் உள்ள எல்-1 லாக்ரேஞ்ச் புள்ளியில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் பயணித்து வரும் நிலையில் இன்று இஸ்ரோ முக்கிய அப்டேட்டை கொடுத்துள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் சூரியனின் மேல்வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்ய உள்ளது. இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த மாதம் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது.
பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1-ல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும். அதன்பிறகு அதில் உள்ள 7 கருவிகள் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் தான் சூரியனை நோக்கிய ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டபாதைகள் படிப்படியாக உயரத்தப்பட்டன.
இந்நிலையில் தான் கடந்த 30ம் தேதி பூமியில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது. பூமியின் ஈர்ப்பு விசை உள்ள பகுதியை விட்டு வெளியேறிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் குறித்த ஆய்வுக்கான லாக்ரேஞ்ச் எல்1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது.
இந்நிலையில் தான் ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்த முக்கிய அப்டேட்டை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஆதித்யா எல்-1 விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும், லாக்ரேஞ்ச் எல்1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 விண்கலத்தின் பாதை மாற்றும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஆதித்யா-எல்1 திட்டத்தின் விண்கலம் திட்டமிட்டப்படி செயல்பட்டு வருகிறது. இந்த விண்கலம் சூரியன் மற்றும் பூமிக்கு இடையேயான எல்1 புள்ளியை நோக்கி சென்று வருகிறது. அதாவது டிசிஎம் எனும் விண்கலத்தின் பாதை மாற்று பணி 16 வினாடிகளில் நேற்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19ம் தேதி டிரான்ஸ்-லாக்ரேஞ்சன் பாயிண்ட் 1 இன்செர்ஷன் நிகழ்த்தப்பட்டது. இதையடுத்து விண்கலத்தின் பாதையை சரிசெய்ய இந்த செயல்பாடு தேவையானனதாக இருந்தது. தற்போதைய நிகழ்வை தொடர்ந்து ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள காந்தபுல ஆய்வுக்கருவி சில நாட்களில் பணியை தொடங்கும். இந்த கருவி என்பது சூரியனில் இருந்து வெளிவரும் துகள்களின் காந்த தன்மை குறித்த ஆய்வை மேற்கொள்ளும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications