அதிமுக யார் கையில்... பொதுக்குழுவில் வெளிச்சத்திற்கு வந்த பனிப்போர்
சென்னை: அதிமுகவுக்கு யார் தலைமைதாங்குவது என்ற விவகாரத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே பனிப்போர் நிலவுவது நேற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒற்றுமையோடு இருக்கிறோம் என அதிமுக சீனியர்கள் ஊடகங்களில் பேட்டியளித்தாலும், உள்விவகாரம் அவர்களை பெரியளவில் கவலைக்கொள்ளச் செய்துள்ளதாம்.
குறிப்பாக கே.பி.முனுசாமி, மதுசூதணன் போன்றோர் அமைச்சர்கள் சிலரின் நடவடிக்கைகளை பார்த்து மிகுந்த வேதனை அடைந்தார்களாம்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.குரல்
அதிமுக பொதுக்குழு மேடையில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஆகியோர் அருகருகே அமராமல் அவர்களுக்கு மத்தியில் மதுசூதணனை அமர வைத்திருந்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமியின் குரலாக அமைச்சர் தங்கமணியும், ஓ.பன்னீர்செல்வம் குரலாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும் பொதுக்குழுவில் சில விஷயங்கள் பேசினர்.

234 தொகுதிகள்
வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதை எடப்பாடி பழனிசாமி கைகளில் ஒப்படைப்போம் என அமைச்சர் தங்கமணி பேசினார். அதவாது மீண்டும் எடப்பாடியார் தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்பதை சூசகமாக உணர்த்தினார்.

மரியாதை
அமைச்சர் தங்கமணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அதிமுக கூட்டுத்தலைமையில் இயங்குகிறது, கூட்டுத்தலைமை என்பது கூரிய கத்தியை போன்றது அதை கவனமாக பயன்படுத்த வேண்டும் என பொடி வைத்தார். மேலும், ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவருக்கும் சமமாக மரியாதை தர வேண்டும் என வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டார். இதன்மூலம் ஓ.பி.எஸ்.க்கு கட்சியினர் அளிக்கும் மரியாதை குறைந்துவிட்டது என்பதை உணர்த்தியுள்ளார்.

நிர்வாகிகள் புலம்பல்
பொதுக்குழுவில் பங்கேற்ற நிர்வாகிகள் பலர், யாருக்கு தான் நாம மரியாதை தருவது, யார் பக்கம் தான் நிற்பது என ரொம்பவே நொந்துகொண்டனர். மேலும், அவர்கள் கார் ஏறி அங்கிருந்து புறப்படும் வரை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பனிப்போரை பற்றி வெளிப்படையாகவே விவாதித்தனர்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம்












Click it and Unblock the Notifications