அதிமுக பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு கொடுங்க.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஓபிஎஸ் ஏமாற்றம்
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில், பாரபட்சமின்றி அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பொதுக்குழுவின் கால அட்டவனை வேண்டும் எனக் கூறியதுடன் வழக்கையும் தள்ளி வைக்க வேண்டும் எனக் கூறினார். மேலும், காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டிருந்த 26 கேள்விகளுக்கு அதிமுக தரப்பிலிருந்து இன்னும் பதில்வரவில்லை எனத் தெரிவித்தார்.

அரவிந்த்பாண்டியன்
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரான அரவிந்த்பாண்டியன் பெஞ்சமின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு பொதுக்குழுவை கூட்ட எப்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கே அதிகாரம் உள்ளதோ அதேபோல் பாதுகாப்பு கோரியும் அவர்கள் தான் மனு தாக்கல் செய்ய முடியும் என வாதிட்டார். பொதுக்குழுவில் கலந்துகொள்ளவுள்ள மூன்றாவது நபர் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அதனால் பெஞ்சமின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் வாதிட்டார்.

நீதிபதி கேள்வி
அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞரான அரவிந்த் பாண்டியனை குறுக்கிட்ட நீதிபதி, பெஞ்சமின் பொதுக்குழு உறுப்பினர் இல்லையா என வினவினார். அதற்கு பதிலளித்த அரவிந்த்பாண்டியன், பெஞ்சமின் பொதுக்குழு உறுப்பினர் தான் ஆனால் அதற்காக பாதுகாப்பு கேட்டெல்லாம் அவர் வழக்குத் தொடர முடியாது என மீண்டும் வாதிட்டார்.

பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு
இதனிடையே பெஞ்சமின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு 2,600 பேர் வரை வருவார்கள் என்றும் அனைவருக்கும் அடையாள அட்டை வாகன பாஸ் வழங்கப்படும் எனவும் கூறினார். எம்.பி.யாக இருந்தாலும் சரி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி உரிமை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பெஞ்சமின் தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி சதீஷ்குமார், அந்த தரப்பு இந்த தரப்பு என பிரித்து பார்க்காமல் எல்லா தரப்புக்கும் பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

நீதிபதி உத்தரவு
அதிமுக பொதுக்குழு அட்டவணை ஓ.பன்னீர்செல்வம் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன் பொதுக்குழு பாதுகாப்பு தொடர்பான காவல்துறையின் 26 கேள்விகளுக்கு அதிமுக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
-
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications