மாமன்னன் ஓடினா என்ன, இருந்தால் என்ன? இதுவா நாட்டுக்கு முக்கியம்? விட்டு விளாசிய எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: மாமன்னன் படம் ஓடினால் என்ன இருந்தால் என்ன இதுவா நாட்டு மக்களுக்கு தேவை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாட்டில் அனைத்து பொருட்களின் விலையும் 70 சதவிகிதம் உயர்ந்து விட்டது. அதைப்பற்றி கேளுங்கள் அதை விட்டு விட்டு முதல்வரிடம் எதை எதையோ கேட்கிறீர்களே என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தக்காளி விலை உயர்வு பற்றி
செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, தக்காளி மட்டுமல்ல சின்ன வெங்காயம், பருப்பு, மளிகை சாமான்கள் விலையும் உயர்ந்து விட்டது.

குட்டி அமைச்சர் ஒருவர் வந்திருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் படம் எடுக்கிறார் அவரே படம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். விலைவாசி உயர்வை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. அவரிடம் போய் செய்தியாளர்கள் விலைவாசி உயர்வை பற்றி கேள்வி கேளுங்கள் என்றார். நீங்களே மாமன்னன் படம் பற்றிதான் கேட்கிறீர்கள் இதுவா வயிற்றுப்பசியை போக்கப்போகிறது என்றார்.
அந்த படத்தைப் பற்றி நிறைய விமர்சனம் வேறு உள்ளது. மாமன்னன் படத்தில் வேதனைக்குறிய விசயம் உள்ளது. இவர்கள்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதாக சொல்கின்றனர். இது பொய்யான தகவல். நான் முதல்வராக பதவியேற்ற போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது சட்டசபையில் சபாநாயகர் தனபால் சட்டசபை கூட்டத்தை கூட்டினார். அப்போது அவரது மைக்கை உடைத்து பெஞ்சை உடைத்து பெரிய ரகளையில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் தனபால் அவர்களின் சட்டையை கிழித்தனர். புனிதமான இருக்கையில் அமர்ந்தனர் திமுகவினர். இவர்களா சமூக நீதியை காப்பாற்றியவர்கள். இவர்கள்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை பாதுகாக்கிறார்களா என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். மாமன்றத்தில் அமர்ந்திருந்த சபாநாயகரை இழுத்து கீழே தள்ளினார்களே அந்த சம்பவத்தை தொலைக்காட்சி மூலம் அனைத்து மக்களும் பார்த்தனர்.
அதை ஏன் சொல்லமாட்டேன் என்கிறீர்கள்.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை கீழே இறக்கி எங்களோடு அமர வைத்தீர்களே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைத்துள்ளதாக பேசுவதற்கு திமுகவினருக்கு என்ன தகுதி இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திமுகதான் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்றம் பெறுவதற்கு அதிமுக கொண்டு வந்த திட்டங்கள்தான்.
அதிமுக காலத்தில் கொண்டு வரப்பட்ட கல்வி புரட்சியால்தான் அனைவரும் கல்வி கற்று இன்றைக்கு உயர்ந்த நிலையில் இருக்கின்றனர். அதைப்பற்றி வேறு எந்த கட்சியினரும் பேசுவதற்கும் தகுதி இல்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications