அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் 13-ம் தேதி நடைபெறும்.. ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அறிவிப்பு!
சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 13-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
இந்த நிலையில்13-ம் தேதி அன்று அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி, அ.தி.மு.க சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதியன்று சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக்த்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்றைய தினம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெறுகிறது எனத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications