அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி.. எடப்பாடிக்கு 4 கேள்விகள்.. பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டனவா என்பன உள்ளிட்ட 4 கேள்விகளுக்கு பதில் விரிவான விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பொதுக் குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல் செய்தார். இவரது மனு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை தொடங்கியது. இதில் ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பு என காரசாரமாக விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

15 நாட்கள்
இதில் ஓபிஎஸ் தரப்பு முன் வைத்த முக்கிய பாயிண்ட்- பொதுக் குழு கூடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பே அழைப்பிதழ்கள் அனுப்ப வேண்டும். ஆனால் நான் வழக்கு தொடர்வதற்கு ஒரு நாள் முன்னர்தான் எனக்கு அழைப்பிதழ் கிடைத்தது என சொல்லப்பட்டது.

ஜூலை 11
அதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஜூலை 11 இல் கூட்ட போவதாக சொல்லும் பொதுக் குழு முந்தைய பொதுக்குழுவின் நீட்சியா இல்லை வேறு பொதுக் குழுவா என நீதிபதி கேட்டார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஜூலை 11 இல் கூட்டவுள்ளது சிறப்பு பொதுக் குழு. இந்த பொதுக் குழுவை கூட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரோ இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை.

ஒரு வாரம் தள்ளி வைக்கலாம்
பொதுக் குழுவை ஒரு வாரத்திற்கு வழக்கை தள்ளி வைக்கலாம் ஆனால் பொதுக் குழுவுக்கு விதிக்கக் கூடாது என வாதிட்டது. இதையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, எடப்பாடி பழனிச்சாமிக்கு 4 கேள்விகளை கேட்டுள்ளார். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டனவா?
Recommended Video

4 கேள்வி
தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக் குழுவை கூட்ட அதிகாரம் இருக்கிறதா, அப்படியெனில் பொதுக் குழு நோட்டீஸில் யார் கையெழுத்திடுவது , எத்தனை நாட்களுக்கு முன்பு பொதுக் குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார். இந்த கேள்விகளுக்கு அதிமுக, இபிஎஸ் தரப்பு விரிவான பதிலை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணை நாளை மதியத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுமா என்பது நாளை தெரியவரும்.
-
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications