அதிமுக நிர்வாகி செய்த அசிங்கம்.. சென்னையில் சக கட்சி நிர்வாகி வீட்டிற்குள் சிறுநீர் கழித்ததாக புகார்
சென்னை: உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக நிர்வாகியின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவின் முன்பாக அதிமுக நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் பி.வி கோவில் தெருவில் வசிக்கும் பரமேஸ்வரன் அதிமுகவின் கட்சி நிர்வாகியாக உள்ளார். இவருக்கும் அதிமுகவை ராயபுரம் எம்ஜிஆர் இளைஞர் அணி பகுதி தலைவர் அறிவழகன் என்பவருக்கும் ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த 17ம் தேதி அறிவழகன், பரமேஸ்வரன் வீட்டிற்கு மிரட்டுவதற்காக சென்றுள்ளார். ஆனால், அப்போது வீட்டில் பரமேஸ்வரன் வெளியில் சென்றிருந்ததால் அவரது மனைவி, அவரது தந்தை மற்றும் 6 வயது குழந்தை மட்டுமே இருந்துள்ளனர். அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய அறிவழகன், வீட்டிற்கு உள்ளே அனைவர் முன்பாகவும் முன்னதாக சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் பரமேஸ்வரன் மனைவி பிரியாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனை அடுத்து பிரியா சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை அறிவழகன் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் ராயபுரம் காவல் நிலைய அதிகாரிகள் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

இதுகுறித்து பிரியா தெரிவித்துள்ளதாவது, "கட்சி தகராறை வெளியில் வைத்துக்கொள்ளாமல் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனது கணவர் பரமேஸ்வரன் வீட்டிற்குள் இல்லாதபோது அனைவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி வீட்டுக்கு உள்ளேயே அறிவழகன் சிறுநீர் கழித்து சென்றது மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும், காவல்துறையினர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications