விடாமல் துரத்தும் "புறா".. மீனா கணவர் மரணம் நினைவிருக்கா? இன்னொரு உயிரை பறித்த புறா கூட்டம்
எச்சங்களை தங்கள் வயலில் சுத்தம் செய்வார்கள். அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு குறைவாக இருந்தால் இந்த பாதிப்பு வரலாம். அமெரிக்காவில் பறவைகள் எச்சம் அதிகம் காணப்படும் மிஸ்ஸிஸிப்பி, ஒஹையோ பகுதிகளில் இந்த ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் அதிகம் காணப்படுகிறது. உடல் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் ஏற்படுவது வழக்கம்.
இன்னொரு மரணம்: கடந்த வருடம் நடிகை மீனாவின் கணவர் புறா காரணமாக இதய பாதிப்பு ஏற்பட்டு பலியான நிலையில் இந்த வருடம் இன்னொரு பெண் அதேபோன்ற பாதிப்பால் பலியாகி உள்ளார்.

ஜாரத்தை சேர்ந்த திம்பால் ஷா என்ற 42 வயது பெண் சென்னையில் இந்த நோய்க்கு பலியானார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் உறுப்பிடை நார்த்திசு (ILD) நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வந்தார். புறாக்கள் மூலம் அவருக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள உறுப்பு மாற்று சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் நுரையீரல் உறுப்பிடை நார்த்திசு (ILD) என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த குமணி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். histoplasmosis ஏற்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். இங்கே பாதிக்கப்பட்ட அந்த குஜராத் பெண்ணுக்கு புறா வளர்ப்பினால் அந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அவர் வீட்டில் இரண்டு புறா பண்ணைகளை வளர்த்து வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு நார்த்திசு நுரையீரல் நோய் பரவியது உறுதி செய்யப்பட்டது. புறாக்களின் கழிவுகள், எச்சங்களினால் இந்த அழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு நுரையீரல் உறுப்பிடை நார்த்திசு பாதிப்பு ஏற்பட்டு நுரையீரல் செயல் இழந்து உள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். அவர் செல்லமாக வளர்த்த புறாவே அவரின் மரணத்திற்கு காரணம் ஆகிவிட்டது.

அறிகுறிகள் என்ன?:histoplasmosisக்கு சிகிச்சை முறை இருந்தாலும் உங்கள் நுரையீரல் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படும். பறவைகளின் எச்சங்களில் இருக்கும் Histoplasma capsulatum என்ற பங்கஸ் காற்றில் பறந்து நமது நுரையீரலுக்கு செல்லும். இதன் மூலம் நுரையீரல் பாதிக்கப்பட்டு,சேதம் அடையும். இதன் காரணமாக நுரையீரல் நாள்பட்ட பாதிப்பை அடைந்து செயல் இழக்கும் நிலை ஏற்படும். ஆனால் வைரஸ் போல ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இது பரவாது.
விவசாயிகள், பூச்சி கட்டுப்பாட்டு தொழிலாளர்கள் கோழி வளர்ப்பவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தோட்டக்காரர்கள், குகை ஆய்வாளர்கள் ஆகியோருக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் இதில் ஏதாவது பணிகளை செய்து, பின் வரும் அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை காண வேண்டும். காய்ச்சல். குளிர், தலைவலி, தசை வலிகள், வறட்டு இருமல், நெஞ்சு வலி ஆகியவை இருந்தால் மருத்துவரை காண வேண்டும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications