செக்ஸ் தொல்லை, விபச்சார வீட்டில் தஞ்சம்! கோயிலிலேயே பெண்களுடன் உறவு! அகோரி கலையரசனின் மறுபக்கம்?
சென்னை: என் கணவர் கலையரசன் எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார், அவர் பிச்சைக்காரியை கூட விட்டு வைக்காத அளவுக்கு பேசுகிறார் என அகோரி கலையரசனின் மனைவி பிரகலட்சுமி அதிர்ச்சியான தகவல்களை கூறியுள்ளார்.
அகோரி கலையரசனுக்கும் அவருடைய மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது இன்ஸ்டா பேஜில் பிரகலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் என் கணவர் கலையரசனை காணவில்லை, அவரை பார்த்தால் என்னிடம் சொல்லுங்கள், இல்லாவிட்டால் போலீஸில் பிடித்து கொடுத்துவிடுங்கள்.

அவரால் பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து விட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய அந்த மனைவி, தனது கணவர் கோயிலிலும் கூட பெண்களுடன் தகாத உறவில் இருந்துள்ளார் என அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் வேறு ஒருவரின் பெண் வீட்டில் படுத்திருக்கும் காட்சிகளை கூட வீடியோவாக எடுத்து போட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரகலட்சுமி, கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என் கணவருக்கு நீண்ட காலமாக குடிப்பழக்கம் இருக்கிறது. நான் இந்த பழக்கத்தை விடுமாறு சொன்னால் என்னிடம் சண்டையிடுகிறார். ஒரு நாள் வீட்டிற்குள்ளேயே குடித்துவிட்டு என்னிடம் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்.
பிறகு வேறு ஒரு விபச்சார பெண் வீட்டில் இருப்பதாக எனக்கு தெரிந்து அங்கு போய் வீடியோ எடுத்தேன். "யார் வீட்டில் இருக்கிறாய்" என்றும் கேட்டேன். ஆனால் என்னை பற்றியும் என் குழந்தைகளையும் தப்பு தப்பாக பேசினார்கள். இனி அவருடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பமில்லை.
அவருடைய அம்மாவிடம் போய் "நான் அவருடன் உறவு வைத்துக் கொள்வதே இல்லை" என போய் சொல்லிவிட்டு, "நான் பிச்சைக்காரியுடன் போய் உறவு வைக்க போகிறேன். அந்தளவுக்கு எனக்கு வெறியாக இருக்கிறது" என கூறியுள்ளார். ஆனால் நானும் அவருடன் சாதாரண பெண் போல் வாழ்ந்துள்ளேன்.
அவரை போலீஸார் கைது செய்ய வேண்டும். எனக்கு 4 வயது, 3 வயது , 9 மாதத்தில் குழந்தைகள் உள்ளன. அந்த குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். எனக்கு இரண்டும் பெண் குழந்தைகள் பிறந்ததை அடுத்து, அவர் வீட்டில் இருப்பவர்கள், "உனக்கு வாரிசே இருக்காமல் போய்விடும். நீ இரண்டாவது கல்யாணம் செய்துகோ" என்றனர்.
அதனால்தான் 3ஆவது குழந்தை பெற்றுக் கொண்டேன். அது ஆண் பிள்ளையாக பிறந்துவிட்டது. இனி என் குழந்தைகளுக்காக வாழ்வேன். என்னை இத்தனை நாட்களாக ஏமாற்றி, கொடுமை செய்து அடித்து துன்புறுத்தி, ஊரை ஏமாற்றியதற்காக அவரை போலீஸார் கைது செய்ய வேண்டும் என கண்கலங்கிய படியே கூறினார்.












Click it and Unblock the Notifications