அதிமுக கூட்டணி யாருடன்? லோக்சபா தேர்தல் வரட்டும்.. நன்றி வணக்கம் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டு இருக்கிறது. தேர்தல் வரும் போது அனைவரையும் அழைத்து கூட்டணி யாருடன் என்று அறிவிப்போம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு மத்தியில் ஆளும் பாஜக மட்டுமல்லாது மாநில கட்சிகளும் தயாராகி வருகின்றன. எதிர்கட்சியினர் ஒன்றாக இணைந்து பாஜகவை வீழ்த்த வலிமையான கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு அணி உருவாகியுள்ளது. அதே நேரத்தில் அதிமுக பாஜக கூட்டணி கடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டியிட்டனர். இப்போதும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளதாக டெல்லி மேலிட தலைவர்கள் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவையும், ஜெயலலிதாவையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அதிமுக முன்பை விட வலிமையாக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஆகஸ்ட் 2ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு லோக்சபா தேர்தலுக்கான வெற்றியாக அமையும் என்றும் கூறினார். அதிமுகவில் வெற்றிடம் இல்லை என்றும் கட்சியை பலப்படுத்தும் வேலை நடைபெற்று வருவதாகவும் அனைத்து இடங்களும் விரைவாக நிரப்பப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் பாஜக உடன் கூட்டணி தொடர்கிறதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி இப்போது தேர்தல் இல்லையே என்று தெரிவித்தார், தேர்தல் வருவதற்கு இன்னமும் ஓராண்டு இருக்கிறது என்றும் தேர்தல் வரும் போது யாருடன் கூட்டணி என்று உங்களை எல்லாம் அழைத்து எந்தெந்த கட்சியோடு கூட்டணி அறிவிப்போம் என்றும் ஏற்கனவே பாஜக பற்றி நாங்கள் சொல்லியாச்சு என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
பாஜக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஓ.பன்னீர் செல்வம் கூறுகிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, அவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை அங்கே போய் கேளுங்கள் என்று சொன்னார். எங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை எங்களிடம் கேளுங்கள் நாங்க வந்து தெளிவாக இருக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் தேர்தல் கூட்டணி வைக்கப்பட்ட போது கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகளை இப்போது கடைபிடிப்போம். காலம் கணிந்து வரும் போது வெளிப்படையாக பேசுவோம். தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டு இருக்கிறது. அவசரமில்லை. பாஜக உடன் உறவு எப்படி இருக்கிறது என்று ஏற்கனவே நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கூட்டணி பற்றி தொடர்ந்து கேள்விகள் வரவே.. நன்றி வணக்கம் என்று கூறி விடைபெற்றார் எடப்பாடி பழனிச்சாமி. பாஜக உடன் கூட்டணி தொடர்கிறதா இல்லையா என்று வெளிப்படையாக கூறாமல் சென்றது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர்












Click it and Unblock the Notifications