"நவீன சாணக்கியர் அமித் ஷா".. ஒரே போடாக போட்ட ஓ.பி.எஸ்.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி!
அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அமித்ஷா முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்... இனிவரும் தேர்தல்களில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று உறுதிபட ஓபிஎஸ் கூறி உள்ளதுடன், "நவீன காலத்தின் சாணக்கியர் அமித்ஷா" என்று பேசியது மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.
கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வந்திருக்கிறார்.. ஏர்போர்ட்டில் அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.
பின்னர், ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

உறுதி
ரூ.900 கோடியில் வல்லூரில் இந்தியன் ஆயில் பெட்ரோலிய முனையத்துக்கு அடிக்கல்லும் நாட்டினார்.. இதைதவிர, ரூ.1400 கோடியில் அமுல்லைவாயிலில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆலைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி தற்போது மீண்டும் உறுதியாகி உள்ளது.

கூட்டணி
வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதா, அமித்ஷாவிடம் என்ன பேசுவது என்பது தொடர்பாக சென்னையில் அதிமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டமும் நடந்தது.. மேலும், தொகுதிகள், சீட் விவகாரம் குறித்து, அமித்ஷா பேசினால், அதற்கு என்ன பேசுவது என்றும் மா.செக்களிடம் கருத்துகளை முதல்வர், துணை முதல்வர் கேட்டறிந்ததாகவும் சொல்லப்பட்ட நிலையில், தற்போது இரு கட்சிகளின் கூட்டணி உறுதியாகி உள்ளது.

உறுதி
இந்த விழாவில், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அமித்ஷா முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்... இனிவரும் தேர்தல்களில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று ஓபிஎஸ் உறுதிபட கூறியுள்ளார்.. ஒரு அரசு விழாவில் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளதும், "நவீன காலத்தின் சாணக்கியர் அமித்ஷா" என்று ஓபிஎஸ் பேசியது மேலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

முருகன்
ஆனால், எல். முருகன் ஏற்கனவே 60 சீட் கேட்டு வந்த நிலையில், பாஜகவுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு என்பது இதுவரை தெரியவில்லை.. அதேபோல, அதிமுக கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளரை, பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று ஏற்கனவே வானதி சீனிவாசனும், முருகனும் தெரிவித்திருந்த நிலையில், அது சம்பந்தமாகவும் இனிமேல்தான் தெரியவரும். அதேபோல, பாஜக, பாமக, தேமுதிக கட்சி நிர்வாகிகளும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால், கடந்த முறை போலவே, இந்த முறையும் அதே கூட்டணியே தொடரும் என்பதும் நிரூபணமாகி உள்ளது!
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications