அதிமுக அதிரடி.. நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
Recommended Video
சென்னை: நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன், விக்கிரவாண்டியில் எம்.ஆர்.முத்தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று, அக்கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டியிலும், நாங்குநேரியிலும், அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிமுக வேட்பாளர்
பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

முத்தமிழ்செல்வன் விழுப்புரம் வடக்கு மாவட்டம், கானை ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். 1985 முதல் 1995ம் ஆண்டுவரை கல்பட்டு ஊராட்சி தலைவராகவும் இருந்தவர் முத்தமிழ்செல்வன்.

இதேபோல, நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பதவியில் இருப்பவர் வெ.நாராயணன். அதேநேரம், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. பாஜகவும் அங்கே போட்டியிட தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில் அதிமுக புதுச்சேரி மாநிலத்திற்கான வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications