சென்னை விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமனுடன் எஸ்பி வேலுமணி சந்திப்பு- அண்ணாமலையுடன் ஆலோசனை!
சென்னை: தமிழ்நாடு வருகை தந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சந்தித்து பேசினார். மேலும் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் தமது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறியது பெரும் விவாதப் பொருளானது. அதிமுக, பாஜக தலைவர்கள் இருதரப்பும் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக சென்றது. இதனைத் தொடர்ந்து பாஜகவின் கலகக் குரல் வேகம் குறைந்தது.
மேலும் தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்து அத்தனை பஞ்சாயத்துகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இதனையடுத்து அதிமுக தலைவர்களும் பாஜகவுடனான கூட்டணியை உறுதி செய்து பேசி வருகின்றனர்.
இந்த பின்னணியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு வருகை தந்திருந்தார். சென்னை விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடனும் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications