அதிமுகவில் ஆர்.பி.உதயகுமாரின் அதிரடி வளர்ச்சி.. கிளைச் செயலாளர் மகன் டூ எதிர்க்கட்சி துணைத் தலைவர்
சென்னை: தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாதாரண கிளைச் செயலாளர் மகனாக அரசியலில் என்ட்ரி கொடுத்த உதயகுமார், இன்று தமிழக அரசியல் மற்றும் அதிமுக வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்.
அவரது பின்னணி பற்றியும் கடந்து வந்த அரசியல் பாதை பற்றியும் இங்கே பார்க்கலாம்.

வழக்கறிஞர்
மதுரை அவனியாபுரம் மீனாட்சி நகர் அதிமுக கிளைச் செயலாளராக இருந்த போஸ், தனது மகன் ஆர்.பி.உதயகுமாரை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற ஆசையில் சட்டம் படிக்க வைத்தார். சட்டப் படிப்பு முடிந்த கையோடு நீதிமன்றத்துக்கு வழக்கு தொடர்பாக பிராக்டீஸ் செய்ய செல்வார் என்று பார்த்தால் அதிமுக நிகழ்ச்சிகளில் அரசியல் பிராக்டீஸை தொடங்கினார் உதயகுமார். சுறுசுறுப்பும் -பணிவும் அவருக்கு சசிகலாவின் அண்ணன் மகனான டாக்டர் வெங்கடேஷின் அறிமுகம் பெற்றுத் தந்தது.

சட்டமன்றத் தேர்தல்
2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் சீட் வாங்கிவிட வேண்டும் என்ற முயற்சி தோல்வியில் முடிந்தாலும் கூட, திமுக ஆட்சி செய்த அந்த 5 ஆண்டுகளும் மனம் தளராமல் அதிமுகவை வளர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினார் உதயகுமார். இந்த தகவலை டாக்டர் வெங்கடேஷ் மூலம் ஜெயலலிதாவின் கவனத்திற்கும் அவ்வப்போது கொண்டு செல்வதில் கவனமாக இருந்தார். அதோடு மாணவரணியிலும் முக்கியப் பொறுப்பை பெற்று அரசியல் கிராஃபை உயர்த்திக்கொண்டே சென்றார்.

2011-ல் சீட்
விருதுநகர் மாவட்டத்தில் சிவசாமி என்ற நிர்வாகி மீதிருந்த கோபம் காரணமாக அவருக்கு பதில் சாத்தூர் தொகுதியை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கினார் ஜெயலலிதா. திமுகவின் சக்தி வாய்ந்த நிர்வாகிகளில் ஒருவரான சாத்தூர் ராமச்சந்திரனை தோற்கடித்து முதல்முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைந்த அவருக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா. ஆனால் எல்லாம் சில மாதங்கள் மட்டுமே.

ஓவர் பெர்ஃபார்மன்ஸ்
காரணம் இவரது ஓவர் பெர்ஃபார்மன்ஸ் ஜெயலலிதாவை எரிச்சல் அடைய வைத்தது. சட்டமன்றத்திற்குள் செருப்பு அணியாமல் சென்றது, ஜெயலலிதா செல்லும் வழியில் 10 கிமீ தூரத்திற்கு டியூப் லைட்களை கட்டி வாங்கிக் கட்டிக் கொண்டது என இவருக்கு சறுக்கல்கள் தொடங்கின. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஆர்.பி.உதயகுமார் ஓவர் பெர்ஃபார்மன்ஸை கைவிட்டு விட்டு அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். டாக்டர் வெங்கடேஷ் மூலம் சில மாதங்கள் கழித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரானர் ஆ.ர்.பி.உதயகுமார்.

சின்னம்மா என குரல்
அமைதியாக முதல் டெர்ம் அதிமுக ஆட்சியை நிறைவு செய்த அவர் 2016-ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்த போது மீண்டும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சின்னம்மா தான் முதலமைச்சராக வர வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் வேறு யாருமல்ல இதே ஆர்.பி.உதயகுமார் தான். ஓ.பன்னீர்செல்வத்தை அவமானம் செய்யும் விதமாக தொடர்ந்து சின்னம்மா சின்னம்மா என குரல் கொடுத்து வந்தார்.

பாரத் நெட்
ஆனால் அப்படிப்பட்ட அவரே அரசியல் காலச்சக்கர ஓட்டத்தால் இன்று முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இது தனிக்கதை. அதற்குள் இப்போது செல்ல வேண்டாம். பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமாரின் பெயர் அடிபடத் தொடங்கியது. விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பிரச்சனையை வில்லங்கமில்லாமல் தனது சாதுர்யத்தால் முடித்தார். இது அவர் மீதான நம்பிக்கையை எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரிக்கச் செய்தது.

முக்குலத்தோர்
ஓ.பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்த பல முறை தனது தூதுவராக ஆர்.பி.உதயகுமாரை அனுப்பினார் எடப்பாடி பழனிசாமி. பேசிப் பேசி டயர்டு ஆன உதயகுமார், இனி அவர் வீட்டுக்கு நான் செல்ல மாட்டேன், பொதுக்குழுவை கூட்டுங்கள் பார்த்துக்கொள்வோம் என ஒரே அடியாக எடப்பாடி பழனிசாமி பக்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். முக்குலத்தோர் சமுதாயத்தின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் இருந்த இடத்தில் இன்று ஆர்.பி.உதயகுமாரை அமர வைத்து அழகு பார்த்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
-
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி












Click it and Unblock the Notifications