குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றம்: செல்வி இராமஜெயம் போட்டியிடுவார் என அறிவிப்பு!
சென்னை: கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த இராம. பழனிசாமி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம் குறிஞ்சிபாடி தொகுதியில் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக ஜான்தங்கம் போட்டியிடுவார் என்றும் அதிமுக தலைமை கூறியுள்ளது.
அதிமுக கூட்டணி தொகுதியில் 177 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதிமுக வேட்பாளர் பட்டியலில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளராக இராம. பழனிசாமி அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம் குறிஞ்சிபாடி தொகுதியில் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதேபோல் பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக ஜான்தங்கம் போட்டியிடுவார் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், கடலூர் மத்திய மாவட்டம், (156) குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக திருமதி.செல்வி இராமஜெயம் அவர்கள் (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கடவார் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் முன்னாள் அமைச்சர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு, அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக ஜான்தங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications