நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. திமுக செய்யும் வேலையை பாருங்க.. தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் வார்டு வரையறை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுக பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான ஆர். எம். பாபு முருகவேல் மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவிதார்.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இனி பாக்கி இருப்பது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் மட்டுமே. எனவே உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.

அதிமுக ஆட்சேபணை
மேலும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் அனைத்து கட்சி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் அஇஅதிமுக சார்பில் கழக மாவட்டச் செயலாளர்களும், தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களையும் ஆட்சேபனைகளையும் தெரிவித்தனர்.

அதிமுக புகார்
இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் வார்டு வரையறை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுக செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான ஆர். எம். பாபு முருகவேல் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தபிறகு அவர் அளித்த பேட்டியில்,

வார்டு வரையறை வாய்மொழி உத்தரவு
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையிலான அனைத்து கட்சி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அதிமுக சார்பில் கூறப்பட்ட ஆட்சேபனைகளின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படவில்லை. வாய்மொழி உத்தரவாகத்தான் வார்டு மறுவரையறை, வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக எங்களுக்குத் தெரிகிறது.
அதாவது திமுகவின் வாங்கு வங்கி குறைவாக இருக்கும் வார்டுகளில் சில வாக்காளர்களை தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்கவும், அந்தந்த பகுதியிலுள்ள திமுக நிர்வாகிகளுக்கு சாதகமாகவும் வார்டு மறுவரையறை, வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் நடைபெற்று வருவதாக பாபு முருகவேல் குற்றம் சாட்டினார். கடந்த அதிமுக ஆட்சியில் 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது அரசு சார்பில் முறையான அறிவிப்பு செய்து, பொதுமக்களிடம் கருத்து கேட்பது, வார்டு மறுவரையறை பணிகள் நடைபெற்றது.
ஆனால் தற்போது நடைபெறும் திமுக அரசில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற நடவடிக்கைகள் உரிய வாக்காளர்களின் அனுமதியின்றி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம். அதாவது கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் வாக்காளர்களின் அனுமதியின்றி அவர்களுக்கு தெரியாமல் ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டிற்கு குறைந்தபட்சம் 30 லிருந்து 80 வாக்காளர்கள் மாற்றப் பட்டிருக்கிறார்கள்.

மாற்றாந்தாய் மனப்பான்மை
இதுமட்டுமின்றி நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல புகார்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தோம் அதன்மீது எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படவில்லை. எனவே தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்றும் ஆளுங்கட்சியை தவிர்த்து மற்றவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது என்பதையுமே காட்டுகிறது. எனவே இந்த புகாரின் மீது உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வார்டு மறுவரையறை யையும், வாக்காளர்களின் முன் அனுமதியின்றி நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வாக்காளர்பட்டியல் திருத்தத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தை நாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என புகாரில் தெரிவித்துள்ளதாக ஆர். எம். பாபு முருகவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
இவ்வளவு பயமா.. கரூரில் பட்டி பார்முலா புகார்.. செந்தில் பாலாஜி பகிரங்க சவால் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா?












Click it and Unblock the Notifications