சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பெரும் புயல் ஏற்பட்டுள்ளது. 4 எம்.எல்.ஏ-க்கள் ஏற்கனவே அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், வரும் சனிக்கிழமை (ஜூன் 20) அதிமுகவின் சென்னை மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தவெகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AIADMK Crisis

உடைந்த அதிமுக

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலின் போக்கையே மாற்றியமைத்துள்ளன. ஒருபுறம் ஆளுங்கட்சித் தரப்பில் 'கொள்கைக் கூட்டணி' என வர்ணிக்கப்பட்ட திமுக கூட்டணிக்குள் சலசலப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகளில் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுகவிற்குள், உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது.

ஏற்கனவே சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி. வேலுமணியை நியமிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 25 எம்.எல்.ஏ-க்கள் தனி அணியாகத் திரண்டனர். தொடர்ந்து நடைபெற்ற தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் இவர்கள் கட்சித் தலைமையின் உத்தரவை மீறி ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுக உடையும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பின்னர் வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்தனர்.

விஜய் கட்சியை நோக்கிப் படையெடுக்கும் நிர்வாகிகள்

இதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு அடுத்த நிமிடமே தவெகவில் இணைந்தனர். மேலும் அதிமுகவின் தூண்களாக பார்க்கப்பட்ட பல நிர்வாகிகளும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்சி சம்பத், சிவபதி ஆகியோர் தவெகவில் இணைந்தனர். அதிமுக மூத்த நிர்வாகியும் எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத அதிமுக தலைமைக்கு, தற்போது அடுத்த பேரிடி காத்துள்ளது.

சென்னையின் மா.செக்கள்

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னையின் முக்கியத் தூண்களாக விளங்கும் 2 சென்னை மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய மூத்த நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை உதறி தவெகவில் இணைய உள்ளனராம்.

சென்னை மாவட்ட செயலாளராக உள்ள ராஜேஷ், தி.நகர் சத்யா ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இவர்கள் அனைவரும் வரும் ஜூன் 20 ஆம் தேதி (சனிக்கிழமை) தவெகவில் இணையப் போவதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னணி என்ன?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுன் பழனிசாமிக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்க திட்டமிட்டு வருவதாகவும், இதனால் மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதாகவும் எழுந்துள்ள அதிருப்தியே இந்த விலகல்களுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் 3-வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் முழங்கிய அதிமுக, தற்போது சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் அடுத்தடுத்த முக்கிய நிர்வாகிகளின் தவெக நோக்கிய படையெடுப்பால் நிலைகுலைந்துள்ளது. ஜூன் 20 அன்று யார் யாரெல்லாம் தவெகவில் இணையப் போகிறார்கள் என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+