சட்டசபையில் அனலை கிளப்பிய மேகதாது.. அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
சென்னை: சட்டசபையில் மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துப்பேசினார். அமைச்சர் துரைமுருகனின் விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வெளிநடப்பு செய்துள்ளனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மட்டுமே ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் கடந்த ஆட்சியில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்து பேசினார். தமிழ்நாட்டில் பிறந்த யாரும் மேகதாதுவில் அணை கட்ட ஆதரவு தரமாட்டார்கள் என்று ஆவேசமாக பேசினார். இந்த நிலையில் துரைமுருகன் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை என்றும் சட்டசபையை விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சட்டசபையில் கண்டன தீர்மானம் ஏன் கொண்டு வரவில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications