மந்தமான அதிமுக விருப்ப மனு விநியோகம்.. எடப்பாடி பழனிசாமி போட்ட உத்தரவு.. என்ன நடக்குது?
சென்னை: அதிமுக சார்பாக போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் சூழலில், எதிர்பார்த்த அளவிற்கு நிர்வாகிகள் இடையே உற்சாகம் இல்லாத மந்தமான சூழல் உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகள் மற்றும் அமைப்புகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாத தொடக்கத்தில் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் அதிமுக தரப்பில் சில மாதங்களுக்கு முன்பாகவே பிரச்சாரம் தொடங்கப்பட்டுவிட்ட சூழலில், தற்போது விருப்ப மனுக்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது.

அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர். டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கிய இந்த விருப்ப மனு விநியோகம், டிசம்பர் 23ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டிசம்பர் 15ஆம் தேதி மட்டும் அதிமுகவினர் பலரும் விருப்ப மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.
அன்று ஒருநாளில் மட்டும் 1,300 விருப்ப மனுக்களை நிர்வாகிகள் பெற்றுக் கொண்டு தாக்கல் செய்தனர். ஆனால் 2வது நாளில் விருப்ப மனுக்கள் விநியோகம் வெறும் 64ஆக குறைந்தது. இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமி காது வரை சென்றுள்ளது. இதனால் உடனடியாக அலர்ட்டான எடப்பாடி பழனிசாமி, கடந்த தேர்தலின் போது 8,241 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அதிமுகவின் அத்தனை அமைப்புகளும் உஷாராகின. அமாவாசை தினமான நேற்று அதிகளவில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதேபோல் 234 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று அதிமுக ஐடி விங் மூலமாக விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களாக அதிகளவில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் மார்கழி மாதம் என்பதால் நல்ல நாள் பார்த்து பலரும் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக கூறியுள்ள டிசம்பர் 15 முதல் 23 வரை 3 முகூர்த்த நாட்கள் மட்டுமே இருப்பதால், அதிமுகவினர் புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.
-
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின் -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம்












Click it and Unblock the Notifications