ஆள் இல்லாத கடையில் டீ போடுகிறாரே.. ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்
சென்னை : ஒரு சில ஆட்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்வது, ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதை போல உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் வரும் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமரிசித்துள்ளார். சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் ஜீவாதார உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது. சொத்துவரி, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பல்வேறு பொருள்களின் ஜிஎஸ்டி வரியைக் குறைத்தது. இன்று ஜிஎஸ்டி வரி அதிகமாகியுள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த சூழ்நிலையில் கூட ஜிஎஸ்டி விஷயத்தில் எங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தோம்.
கல்விக்கடன் ரத்து, மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ருபாய், பெட்ரோல், டீசல் விலை, கேஸ் சிலிண்டர் மானியம், முதியோர் உதவித்தொகை என திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், அவர்களின் கட்சித் தலைவருக்கு ஊர் தோறும் சிலை வைக்கிறார்கள். அதற்கு பணம் இருக்கிறது, மக்கள் நலப்பணிகளுக்கு பணம் இல்லையா? திமுக விளம்பர அரசியல், கருணாநிதிக்கு புகழ்பாடுதல் ஆகிய இரண்டு வேலைகளைத் தான் செய்து வருகிறது. அதிமுக கொண்டு வந்த திட்டத்துக்கு லேபிள் ஓட்டுகிற வேலையும், பெயிண்ட் மாற்றுகிற வேலையையும்தான் செய்கிறது.
Recommended Video
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது. மாநில அரசு ஏன் குறைக்கவில்லை? சமூக நீதிக்கான அரசு என்று கூறிக்கொள்ளும் திமுக சமூக நீதிக்கு எதிராகவே செயல்படுகிறது. ஓபிஎஸ், ஒரு சில பேரை வைத்துக்கொண்டு, நான்தான் கட்சி என்று சொல்வது ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதை போல வேடிக்கையாக இருக்கிறது. மாநிலத்தின் நலன், சிறுபான்னையினரின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அதிமுக-வின் நோக்கம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்












Click it and Unblock the Notifications