நேற்று கோவை விஷ்ணு பிரபு... இன்று மாஜி எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணன்.. திமுகவுக்கு தாவும் அதிமுக தலைகள்
சென்னை: சட்டசபை தேர்தலில் தோல்வி, உட்கட்சி பூசல், யார் அடுத்த தலைமை என பெரும் குழப்பத்தில் சிக்கியிருக்கும் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணையும் படலம் தொடருகிறது. கிருஷ்ணராயபுரம் தொகுதி மாஜி எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணன் இன்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு அதிமுகவின் இளைஞர், இளம் பெண்கள் பாசறையின் மாநில துணைத் தலைவரான கோவை விஷ்ணுபிரபு திமுகவில் இணைந்தார். அதிமுக வெல்ல வேண்டும் என்பதற்காக அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் யாகம் வளர்த்தவர்.

கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்குப் போய் யாகம் நடத்தி பரபரப்பை கிளப்பிய அதே விஷ்ணுபிரபுதான் இப்போது திமுகவுக்கு தாவியிருக்கிறார். அத்துடன் இன்னமும் பல லட்சம் பேர் அதிமுகவை விட்டு வெளியேறுவார்கள் எனவும் கூறியிருக்கிறார் விஷ்ணு பிரபு.
இந்நிலையில் இன்று கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணன் திமுகவில் இணைந்தார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னில் அவர் திமுகவில் இணைந்தார். கீதா மணிவண்ணனின் இந்த திடீர் முடிவால் கரூர் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications