உயிர்போகும் நாளில் என் உடலில் அதிமுகவின் கொடி போர்த்துவதே பெருமை... ஓபிஎஸ் உருக்கம்
Recommended Video
சென்னை: என் உயிர் போகும் நாளில் அ.தி.மு.க. கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக லட்சியமாக வைத்து வாழ்கிறேன்' என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் பா.ஜ.கவில் இணைந்துவிடுவார் என்றும், அவருக்கு ஆளுநர் பதவி கேட்கப்படுவதாகவும் அமமுக வைச் சேர்ந்த தங்கத் தமிழச்செல்வன் கூறியிருந்தார்.
அதே போல், பாஜகவின் ஏஜெண்டாக இருந்ததால் தான் பன்னீர்செல்வத்தை பதவியில் இருந்து இறக்கினோம் என்று டிடிவி தினகரனும் கூறினார். இதுகுறித்து நிருபர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், ஓ. பன்னீர் செல்வம் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை விவரம்:

உள்நோக்கம்
அதில், அ.தி.மு.கவின் ஒரு சாதரண தொண்டனாக பொது வாழ்க்கையில் பணியாற்றிய என்னை, பெரியகுளம் நகராட்சித் தலைவராகவும், சட்டப்பேரவைக்குள் நுழையும் வாய்ப்பையும், அமைச்சராகவும் முதல்வராகவும் ஆவதற்கான வாய்ப்புகளை வழங்கி, நான் கனவிலும் எதிர்பார்க்காத உயரங்களைத் தந்த அ.தி.மு.கவை விட்டு நான் பா.ஜ.கவுக்கு செல்லப்போகிறேன் என்று ஒரு அடுக்காத புரளியை அவதூறாக பரப்பிவருகின்றன சில உள்நோக்கம் கொண்ட ஊடகங்கள்.
|
மோடியைப் பாராட்டினார்
நான் வணங்கும் அம்மா, அரசியல் ரீதியாக தேர்தல் களத்தில் எதிர்நிலைகள் கொண்டபோதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மோடியைப் பாராட்டினார். ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த பாதத் தடத்தில்தான் இந்த முறை பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தோம்.

லட்சியம்
உயிர்போகும் நாளில் என் உடலில் அ.தி.மு.கவின் கொடி போர்த்துவதையே என் வாழ்நாளில் பெருமையாக, லட்சியமாக கொண்டு வாழும் என்னை, கட்சிமாறப் போகிறேன், வேறு கட்சிக்கு போகப் போகிறேன் என்றெல்லாம் வடிகட்டிய பொய்யை வதந்திகளாக்கி அதனை இந்திய விடுதலைக்கு குரல் கொடுத்த ஊடகங்கள் கூட நடுநிலை என்பதை மறந்து யாருக்கோ வால் பிடித்து புரளியால் குறளி வித்தை செய்வதை நினைத்து மிகுந்த வேதனையடைகிறேன்.

மக்களும் ஏற்கமாட்டார்கள்
என்மீதான, பொய் குற்றச்சாட்டுகளை கழகத் தொண்டர்களும், என் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழக மக்களும் ஏற்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அமமுகவினர் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications