நள்ளிரவில் பரபரப்பு! ஜெயலலிதா படம் இடம் பெற்றிருந்த.. அதிமுக பொதுக்குழு பேனர்கள் கிழிப்பு
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு இறுதிகட்ட பணிகள் நடைபெறும் நிலையில், விழா நடைபெறும் இடத்தின் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 11) வானகரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

அதிமுக பொதுக்குழு
வழக்கு ஒருபுறம் என்றாலும் கூட மறுபுறம் பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வானகரம் தனியார் மண்டபத்தில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரம்மாண்டமான திடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கும் செயற்குழுவுக்கும் இரண்டு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தீர்மானங்கள்
கடந்த பொதுக்குழுவிலேயே ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவு காரணமாக புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இன்று பொதுக்குழுக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

பேனர்கள்
நேற்று மாலை தான் பொதுக்குழு நடைபெறும் இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி இருந்தனர். பொதுக்குழுவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டபம் வரை அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இடம் பெற்றுள்ளன. அதேநேரம் ஒ.பன்னீர்செல்வத்தின் படங்கள் எங்கும் இடம் பெறவில்லை.

கிழிப்பு
இந்தச் சூழலில் அதிமுக பொதுக்குழுவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா, ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் ஃபோட்டோக்கள் இடம் பெற்று இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் பொதுக்குழுக் கூட்டத்துக்காக வைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட பேனர்களை கிழித்து உள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி தொடர்பப்ட்ட வழக்கில் காலை 9 மணியளவில் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. நீதிமன்ற தீர்ப்பு பாசிட்டிவாக வரும்பட்சத்தில் சற்று நேரத்திலேயே பொதுக்குழு கூட்டத்தைத் தொடங்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளது. மேலும், வெளியாட்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் நுழையாமல் இருக்கவும் ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
-
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
Srirangam: அந்த செவுரு எத்தனை பேர பலி வாங்க போகுதோ? ஜெ. அரசியல் வாழ்வை காலியாக்கிய ‘ஸ்ரீரங்கம் சென்டிமென்ட்’ -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்?












Click it and Unblock the Notifications