கிளம்பிய பூதம்.. ஆவின் நிறுவனத்தில் பணியாட்களைச் சேர்த்ததில் முறைகேடு.. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை
சென்னை: கடந்த ஆட்சி காலத்தில் ஆவின் பால் நிறுவனத்தில் பணியாளர் சேர்க்கை நடைபெற்றதில் பல கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தின் போது.. அதிலும், குறிப்பாக கடைசி மூன்று ஆண்டுகளில் ஆவின் நிறுவனத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் அதிக முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பணியிடங்கள்
236 பணியிடங்களுக்கு நடைபெற்ற நியமனத்தில் பணம் வாங்கிக்கொண்டு நியமன நடைபெற்ற முறைகேடுகள் அரங்கேறி உள்ளதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள்
இது தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பால்வளத் துறை இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார். 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் வர இருக்கிறார்கள். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் இதில் அடக்கம் என்று ஆவின் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல கோடி பணப் புழக்கம்
பணியாளர் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இதை தோண்டித் துருவ லஞ்ச ஒழிப்புத்துறை முழுவீச்சில் களம் இறங்க உள்ளது.

பரபரப்பில் ஆவின்
இதனால் கடந்த ஆட்சி காலத்தில், அதுவும் குறிப்பாக கடைசி நேரத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் மட்டும் அவர்களை பணிக்கு அமர்த்தியவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications