அதிமுகவுக்கு வேறுவழியே இல்லை! எடப்பாடியின் பலவீனம் இது தான்! ரவீந்திரன் துரைசாமியின் அரசியல் கணக்கு
சென்னை: அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ள நிலையில் இதன் அடுத்தக் கட்டம் என்னவாக இருக்கும் என்பது பற்றி அரசியல் பார்வையாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசியது, அவர் கூறியதை இங்கே பார்க்கலாம்.
''பாஜக தேசியத் தலைமையின் கண் அசைவுக்கேற்ப தான் அண்ணாமலை தமிழ்நாட்டில் களமாடிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலையை தமிழகத்தில் ஒரு பெரிய தலைவராக உருவெடுக்க வைக்கும் முயற்சியில் பாஜக மேலிடம் ஈடுபட்டுள்ளதாக கருதுகிறேன். அண்ணாமலையின் அண்மைக்கால செயல்பாடுகளை இதைத் தான் காட்டுகின்றன.''

''பாஜகவை விட்டால் அதிமுகவுகு வேறு வழியே இல்லை என்பது தான் உண்மை. பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லாமல் அதிமுகவால் தேர்தலை சந்திக்க முடியாது. மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுகொள்வதில் எடப்பாடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஏற்றுக்கொண்டும் விட்டார். இப்படி லாக் ஆகிவிட்டதை தான் எடப்பாடி பழனிசாமியின் பலவீனமாக பார்க்கிறேன். இந்த பலவீனத்தை தான் அண்ணாமலை தனக்கான அட்வாண்டேஜாக எடுத்துக் கொள்கிறார்.''
''காங்கிரசும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம் என அன்று ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டை இன்று சீமான் எடுத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியால் சீமானை போல் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது. அதிமுகவுக்குள் இருக்கும் சாதி முரண்பாட்டை மறைக்க பாஜகவின் தயவு தேவை. அண்ணாமலையும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பேசுவதை வைத்தெல்லாம் அதிமுக பாஜக கூட்டணி முறிந்துவிடும் என்று சொல்ல முடியாது.''
''எடப்பாடி பழனிசாமியோ, ஜே.பி.நட்டாவோ, அமித்ஷாவோ இது குறித்து பேசினால் தான் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இப்போது நடப்பதெல்லாம் வாடிக்கையான அரசியல் நிகழ்வு என்பதே எனது கருத்து.''
-
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications