9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சத்துணவு - அதிமுக தேர்தல் அறிக்கை!
சென்னை: 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இனி சத்துணவு வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு என தொடங்கப்பட்ட தனியார் பங்களிப்புடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தி செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக.வை தொடர்ந்து ஆளும் கட்சியான அதிமுகவும் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுட்டுள்ளது. பெண்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரையும் கவரும் வகையிலான கவர்ச்சிகரமான அறிவிப்புகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டனர். இதில் பள்ளி மாணவர்களுக்கு சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இனி சத்துணவு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு எம்.ஜி. ஆர் சத்துணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு என தொடங்கப்பட்ட தனியார் பங்களிப்புடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தி செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications