Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நடு ரோட்டில் வைத்து மன்னிப்பு கேட்ட விஜய் சிங்கமா?” அதிமுக சரமாரி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று நடைபெற்ற மாநாட்டில் அதிமுகவை சீண்டிய நிலையில், அக்கட்சியினர் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். "நடு ரோட்டில் வைத்து மன்னிப்பு கேட்ட விஜய் சிங்கமா?" என அதிமுக காட்டமாக விமர்சித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் தன்னை சிங்கம் எனக் குறிப்பிட்டுப் பேசினார். மேலும் பேசிய அவர், "பாசிச பாஜகவுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. பொருந்தா கூட்டணி என்பதால் மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது.

AIADMK Hits Back at Vijay Is He the Lion Who Once Apologized on the Road

அதிமுகவை சீண்டிய விஜய்

அந்தக் கூட்டணிக்குச் செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? மக்கள் சக்தியே நம்முடன் அணியா அணியா திரண்டு இருக்கும்போது இந்த அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கு எதுக்கு? நம்முடைய கூட்டணி சுயமரியாதை கூட்டணியாக இருக்கும்.

எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காப்பது யார்? எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி உள்ளது என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அதிமுக தொண்டர்கள் வேதனையுடன் தவிக்கிறார்கள்." எனப் பேசினார் விஜய்.

ராஜ் சத்யன் பதிலடி

இந்நிலையில், விஜய்யின் பேச்சுக்கு அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"சிங்கம்ங்க...!
யார் சொன்னது?அவரே சொல்லிகிட்டார்!

கோடநாட்டில் நாள் முழுக்க காத்துக் கிடந்து,
கிளம்புங்க.. காத்து வரட்டும் என்ற சொன்ன பிறகு,
நடுரோட்டில் வைத்து மன்னிப்பு கேட்டது,
ஞாபகமில்லை போல...

அதுவும் எதற்கு ..
சாதாரண ஒரு பட வெளியீட்டிற்கு!

அடிமை கூட்டணியாம்!
அடிமைத்தனத்தை பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

உங்கள் படத்தின் 100 ருபாய் டிக்கெட்டை 500-1000 என விற்பதற்கு , நீங்கள் எழுதி கொடுத்த அடிமை சாசனங்களின் HISTORY-Geography பற்றி தொடர்ந்து பேசுவோம்" எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பதிலடி

அதிமுக குறித்த விஜய்யின் விமர்சனத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பதிலடி கொடுத்தார். "அதிமுக இப்போது யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். அறியாமையின் காரணமாக பேசுவதாக பார்க்கிறேன். இதுகூட தெரியாமல் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார் என்று சொன்னால் அவரை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்? மரம் உடனே கனி தராது. அப்படித்தான் ஒரு இயக்கமும், எடுத்தவுடனே எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது.

அது தெரியாமல் சிலர் கட்சி ஆரம்பித்த உடனே இமாலய சாதனை படைத்தது போல பேசுகிறார்கள். மக்கள் செல்வாக்கு பெற்றதைப் போலவும், நாட்டுக்கு உழைத்தது போலவும், அவர்கள் வந்துதான் மக்களைக் காப்பாற்றப்போவது போலவும் சிலர் அடுக்குமொழியால் பேசிவருகிறார்கள். யாரென்று புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்." என்று பேசி இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+