அதிமுக சமுத்திரம்..மீசை வைத்தவர் கட்டபொம்மன் ஆக முடியாது..பாஜக கூட்டணி நீடிக்கும்..ஜெயக்குமார்
அதிமுகவில் தானாக வந்து இணைகின்றனர். பாஜகவினர் யாரையும் அதிமுகவில் இணைக்கவில்லை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக அசுர வேகத்தில் வளர்ச்சி அடைவதால் பிற கட்சிகளில் இருந்து வந்து இணைகின்றனர் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக என்பது கண்ணாடி அல்ல என்றும் அது சமுத்திரம் என்றும் கூறிய ஜெயக்குமார், சமுத்திரத்தில் கல் வீசினால் அந்த கல் காணாமல் போய் விடும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பாஜக இணைந்து கடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலை சந்தித்தன. பெரிய அளவில் அதிமுகவிற்கு பயன் இல்லை என்றாலும் 4 எம்எல்ஏக்களை சட்டசபைக்கு அனுப்பியது பாஜக. வரும் லோக்சபா தேர்தலிலும் அதிமுக பாஜக இடையேயான கூட்டணி நீடிப்பதாக அரசியல் கட்சித்தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாஜகவில் இருந்து சில நிர்வாகிகள் விலகி அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியில் இணைந்து வருகின்றனர். இதனைக் கண்டித்து பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படங்களை எரித்தனர். இதற்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கூட்டணி கட்சியான பாஜகவில் இருந்து அதிமுகவில் நிர்வாகிகள் இணைவதற்கு வானதி சீனிவாசன், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் கருத்துக்களை கூறி வருகின்றனர். செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பாஜகவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவேன் என்று கூறினார்.
நான் தலைவன். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே நான் இருப்பேன். சில முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சி அளிக்க தான் செய்யும். கட்சி அதிர்வுகளை சந்தித்து கொண்டு தான் இருக்கும். அரசியலில் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. இப்போது பார்த்த வினையின் எதிர்வினை இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் நடக்கலாம்.
அரசியல் கட்சி அப்படி தான் வளர முடியும். கட்சியில் இருந்து யார் விலகினாலும், பாஜகவின் பலம் குறையாது. யார் விலகினாலும் வாழ்த்தி வழி அனுப்புவேன் என்றார். நான் தலைவன், எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பேன். நான் எதற்கும் கவலைப்பட போவதில்லை, கட்சி அதிர்வுகளை சந்திக்கும் என்றார்.
தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை;ஜெயலலிதா, கருணாநிதி எப்படி முடிவு எடுப்பார்களோ அதுபோல் தான் என் முடிவும் இருக்கும். தமிழகத்தில் என்னை போன்று தாக்கப்பட்ட தலைவர்கள் இல்லை. பாஜகவை தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்த்துவதே என் நோக்கம். தமிழக அரசியலில் புதிய மாற்றம் தேவை, அதை பாஜக கொண்டு வரும். இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. தனித்து போட்டியிட நேரம் வரும்போது அது பற்றி அறிவிப்போம் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அண்ணாமலை கூறியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், அதிமுக என்பது அசுர வளர்ச்சியடையும் கட்சி, அந்த கட்சியில் பலரும் தானாக வந்து இணைகின்றனர். நாங்களாக யாரும் பாஜகவினரை அழைக்கவில்லை. கட்சியில் இணைவதை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகக்கூடாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக என்பது கண்ணாடி அல்ல யாராவது கல் வீசினால் உடைந்து போகாது. அதிமுக ஒரு பிரம்மாண்டமான சமுத்திரம். அந்த சமுத்திரத்தில் யாராவது கல் வீசினால் காணமல் போய் விடுவார்கள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தவிர தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று நிரூபித்தவர் ஜெயலலிதா. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அம்மா மாதிரி ஒரு லீடர் என்று யாரும் சொல்ல முடியாது. அன்பு காட்டும் போது அம்மாவாகவும் கடுமை காட்ட வேண்டிய நேரத்தில் கடுமையாகவும் நடந்து கொள்ளும் மாபெரும் தலைவர் என்று கூறினார்.
மீசை வைத்தவர் எல்லாம் கட்ட பொம்மன் கிடையாது. செஞ்சிக்கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜாவாக முடியாது - ஜெயலலிதாவிற்கு நிகரான தலைவர் யாரும் இனி வர முடியாது எனவும் ஜெயக்குமார் கூறினார். 2024 லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், அது பற்றி பாஜக தலைவர்களும் கூறியுள்ளனர், அதிமுக தலைவர்களும் கூறியுள்ளனர். லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி நீடிப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
அவிநாசியில் எல்.முருகன்..சிங்காநல்லூரில் அண்ணாமலை.. நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை..பரபரக்கும் கமலாலயம் -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications