லோக்சபா தேர்தல் கூட்டணிக்கு தயாராக உள்ளோம்.. அமைச்சர் ஜெயக்குமார் பளிச் பேட்டி
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் யார் கூட்டணி என்று அறிவதை விட.. அதிமுக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்பதுதான் தினசரி அனைத்து தரப்பினரும் பேசும் விஷயமாகிவிட்டது. தனித்தே நிற்போம்.. தமிழகத்துக்கு நிதி கிடைக்கவில்லை என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருக்கிறார்.
அதிமுகவில் கூட்டணி குறித்து கலவையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. அதன் மற்றொரு அத்தியாயமாக.. அமைச்சர் ஜெயக்குமார், லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

கூட்டணி முடிவு
சென்னையில் அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: லோக்சபா தேர்தலின் போது, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் யாருடன் கூட்டணி குறித்துமுடிவு செய்யப்படும். கூட்டணி பேச்சுவார்த்தை தற்போது வரை தொடங்கப்படவில்லை.

எதிர்க்கட்சிகள் மீது புகார்
கொடநாடு விவகாரத்தை ஆயுதமாக எடுத்துள்ள எதிர்க்கட்சியினர் மண்ணை கவ்வுவார்கள். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார். கொடநாடு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அதிமுக தயங்கவில்லை.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சி
கொடநாடு விவகாரத்தை பயன்படுத்தி ஸ்டாலினும், டிடிவி தினகரனும் ஆட்சியை கவிழ்க்க நினைக்கின்றனர். சாம்பிராணி புகை வந்தாலே யாகம் நடத்தப்படுவதாக தவறாக பேசுவதா? சாமி கும்பிட்டது தவறு என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமானது. சாமி கும்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது.

அஜித்துக்கு பாராட்டுகள்
தாம் செய்கின்ற தொழிலில் பக்தி மிக்கவர் நடிகர் அஜித். அரசியல் குறித்து திறந்த மனதுடன் தமது நிலைப்பாட்டை கூறிய அஜித்துக்கு பாராட்டுகள். மறைந்த கருணாநிதி முன்பே தைரியமாக பேசியவர் அஜித்குமார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications