அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி - வெளியேறிய அதிமுக தலைவர்கள்
மதுசூதனன் மறைவு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நேரில் வந்தும் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் மறைவு செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். மதுசூதனன் மறைவு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். மதுசூதனன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது சென்று உடல் நலம் விசாரித்த சசிகலா தற்போது நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Recommended Video
அதிமுக அவைத்தலைவராக இருந்த மூத்த தலைவர் மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன. 80 வயதான மதுசூதனனுக்கு கடந்த ஜூலை மாதம் திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை திடீரென மோசமானது, மேலும் வென்டிலேட்டர் உதவியுடனும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் அவர் மரணமடைந்தார்.
மதுசூதனன் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மதுசூதனன் மறைவு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் எத்தனையோ சோதனையான காலகட்டங்களில் துணை நின்றவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இடத்தில் மிகுந்த பாசம் கொண்டவர்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சராகவும், 2007ஆம் ஆண்டு முதல் அவைத் தலைவராகவும் இருந்த போதும் தன்னை ஒரு எளிய தொண்டனாகவே வாழ்ந்து காட்டியவர். அவர் மறைவு செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அனைத்து தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
உடல்நலக்குறைவினால் கடந்த மாதம் மதுசூதனன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சசிகலா நேரில் வந்து நலம் விசாரித்தார். அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் வந்து நலம் விசாரித்தார் சசிகலா. மதுசூதனன் சிகிச்சை செலவுக்கு பணம் தருவதாகவும் சசிகலா கூறியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த மதுசூதனன் உடல் தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவினர் ஏராளமானோர் தண்டையார்பேட்டை இல்லத்தில் குவிந்துள்ளனர். இன்று காலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் மதுசூதனன் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்ரமணியம், சேகர்பாபு ஆகியோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சசிகலாவும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் சசிகலா தண்டையார்பேட்டைக்கு நேரில் வந்து மதுசூதனன் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மதுசூதனன் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார் சசிகலா. சசிகலா வருகையை முன்னிட்டு ஏராளமான அதிமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சசிகலா நேரில் வரப்போகும் தகவல் அறிந்த உடன் அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் அங்கிருந்து உடனடியாக வெளியே சென்றனர்.
-
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!












Click it and Unblock the Notifications