Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிடிஆர் ஆடியோ உண்மையா.. பொய்யா? விடாமல் விரட்டும் அதிமுக.. சுப்ரீம் கோர்ட்டுக்கு பறந்த பரபர கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பைக் கிளப்பி இருந்த நிலையில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. ஆடியோ விவகாரத்தை சீரியஸாக கையில் எடுத்துள்ள அதிமுக, இந்த ஆடியோவின் உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய நிதி அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளது.

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் முன்னாள் நிதி அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அந்த ஆடியோவில் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் அவர்களது முன்னோர்களை விட இந்த 2 ஆண்டுகளில் அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். அது தோராயமாக ஒரு 30,000 கோடி இருக்கும் என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்பட்டது.

AIADMK letter to Supreme court chief justice and Union Finance minister on PTR audio issue

அமைச்சர் ஆடியோ : அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது, பொய்யானது என்று விளக்கம் அளித்து இருந்தார். இதற்கிடையே அதிமுக செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் பாபு முருகவேல், நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகம், பாரிமுனையில் உள்ள மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு பிடிஆர் ஆடியோ தொடர்பாக புகார் அனுப்பினார். ஆளுநரைச் சந்தித்தும், அதிமுகவினர் இதுதொடர்பான நடவடிக்கையைக் கோரினர்.

மேலும், டெல்லி சென்றிருந்தபோது எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் இந்த ஆடியோவில் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக முறையிட்டதோடு, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுவரை அதிமுகவினர் மீதான புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் பிடிஆரின் இலாகா மாற்றப்பட்டது.

AIADMK letter to Supreme court chief justice and Union Finance minister on PTR audio issue

கையில் எடுத்த அதிமுக : இந்த நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான பாபு முருகவேல் சிபிஐ மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு அனுப்பிய புகார் மீது சிபிஐ மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ குறித்து அளித்த புகாரின் பேரில் சிபிஐ நடவடிக்கை எடுக்காததால் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சர் பிடிஆர் பேசுவதாக வெளியான ஆடியோவில் கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கோரி, முன்னாள் எம்.எல்.ஏவும் அதிமுக வழக்கறிஞருமான பாபு முருகவேல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய நிதியமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லிக்கு பறந்த கடிதம் : அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் எழுதியுள்ள கடிதத்தில், "முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரத்தில், அந்த குரல் பதிவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அவர் கூறியிருக்கிற குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாறாக அது இவர்களின் குரலை போலவே யாரோ ஒருவர் பேசி அனுப்பி இருந்தால் அந்த நபர் யார் என்று கண்டறிந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 25.4.2023 அன்று மத்திய லஞ்ச ஒழிப்பு துறைக்கும், மத்திய புலனாய்வு துறைக்கும் நான் புகார் மனு அனுப்பியிருந்தேன். அதன் மீது உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

AIADMK letter to Supreme court chief justice and Union Finance minister on PTR audio issue

பாபு முருகவேல் கடிதம் : மேலும், இதற்கிடையே பிடிஆர் பேசியதாக மற்றொரு ஆடியோவும் வெளியானது. இதில் பாஜகவின் சட்ட விதிகள் சரியாக இருப்பதாகவும், கட்சி மற்றும் ஆட்சியை பிரித்துப் பார்ப்பது சரியான நிலை என தெரிவித்திருப்பது போல் ஆடியோ வெளியானது. இந்நிலையில் நான் அனுப்பிய புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசருக்கும், பெருவாரியான பணம் இதிலே சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற காரணத்தினால் சிறப்பு புலனாய்வு குழுவை பணம் சார்ந்த விஷயங்களுக்கு நியமிக்கும் அதிகாரம் மத்திய நிதி அமைச்சருக்கு இருக்கிறது என்பதன் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சருக்கும்,

இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை சிறந்த அதிகாரிகளை கொண்டு நியமிக்கின்ற அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறது என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இந்தக் கடிதத்தை அனுப்புவதாக பாபு முருகவேல் தெரிவித்துள்ளார். பிடிஆர் விவகாரத்தை அதிமுக விடாமல் கையில் எடுத்து அடுத்தடுத்த நகர்வுகளைச் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+