“இறுதி மூச்சு உள்ளவரை அதிமுகதான்..” அடித்து சொல்லும் முன்னாள் அமைச்சர் தங்கமணி
சென்னை: அதிமுகவின் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவராக இருந்த மைத்ரேயன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியும் திமுகவில் இணைவதாக பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில் "இறுதி இறுதி மூச்சு உள்ளவரை அதிமுகதான்" என தங்கமணி அறிக்கை விடுத்திருக்கிறார்.
"எனது இறுதி மூச்சு உள்ளவரை, அதிமுகதான். மூச்சு நின்றதற்குப் பிறகு எனது உடலில் அதிமுக கொடி போர்த்தி இருக்கும்" என்ற தங்கமணி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

அதிமுகவிலிருந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மைத்ரேயன். இவ்வளவு முக்கிய புள்ளியாக இருந்தவரே திடீரென திமுக பக்கம் சாய்ந்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்துதான் தங்கமணி குறித்து பேச்சுகள் அடிப்பட்டன. இப்படி இருக்கையில் தங்கமணி விடுத்திருக்கும் அறிக்கை கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications